கோவை, மார்ச். 29- கோயம்புத்தூர் பார் அசோசியே சன் தேர்தலில் அகில இந்திய வழக்க றிஞர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பி னரும், முற்போக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு பெற்ற கே.சுதீஷ் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்டு பெருவா ரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த 27 ஆம் தேதி கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் முடிவுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட ஆர்.பால கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதே போன்று, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுதீஷ் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட்டு பெருவாரியான வாக்கு கள் வித்தியாசத் தில் வெற்றிபெற் றார். இதேபோன்று, செயற்குழு உறுப் பினர்கள் பொறுப் புக்கு போட்டியிட்ட அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்கத் தின் மாவட்டக்குழு உறுப்பினர் விஷ்ணு மற்றும் தர்மலிங்கம் ஆகியோரும் வெற்றி பெற்றார். கோயம்புத்தூர் பார் அசோ சியேசன் தேர்தலில் முற்போக்கு வழக் கறிஞர்கள் ஒன்றிணைந்து இத்தேர் தலை சந்தித்து அனைத்து இடங் களையும் கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது. ஜனநாயகத்தை நீதிமன்றத்தில் நிலைநிறுத்த நடைபெற்ற தேர்தலிலில், செயலாளர் கே.சுதிஷ் உள்ளிட்ட நம் மவர்கள் வெற்றி பெற்றது, மகிழ்வை ஏற்படுத்துவதாகவும், இவ்வெற்றியை பெறுவதற்கு கடுமையாக உழைத்த அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் மற்றும் சக முற்போக்கு வழக்கறி ஞர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித் துக்கொள்வதாக, அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு தெரிவித்துள்ளது. இதில், மொத்த வாக்குகள் 2366ல் செயலாளருக்கு போட்டியிட்ட சுதீஷ் 1248 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.