திருப்பூர் நாடாளுமன்றத் தொகு தியில் இந்தியா அணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளராக தற்போதைய எம்.பி., கே.சுப்பரா யன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் இந்தத் தொகுதியில் போட்டியிடக்கூடிய அதிமுக, பாஜக மற்றும் சிபிஐ வேட்பாளர்களை நேர லையில் பேட்டி எடுத்தனர். இதில், கே. சுப்பராயன் எம்பி., என்ன செய்தார் இந்த தொகுதிக்கு என்ற கேள்வியை பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் எழுப்பினர். அதற்கு சுப்பராயன் பதில் அளித்துக்கொண்டிருக்கும்போதே, குறுக்கீடு செய்து திசை திருப்பினர் அதிமுக, பாஜகவினர். பின்னர், அந்த நேரலை பேட்டிக் காட்சியை போலித்தனமாக திருத்தம் செய்து சமூக வலை தளங்களிலும் பரப் பியுள்ளனர். அத்தொலைக்காட்சியில் கே.சுப்ப ராயன் எம்பி., பேசியது இதுதான்… நம் அரசியல் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் வேலை என்ன என்பது வரையறுக்கப்பட்டு இருக்கிறது. சட்டம் இயற்றும் அங்கம் தான் நாடா ளுமன்றம். சட்டம் இயற்றும் பொழுது அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பது தான் எதிர்க்கட்சி எம்.பி.யின் வேலை. ஆனால் பாஜக அரசு 44 தொழிலாளர் தொடர்பான சட்டங்களில் 15 சட்டங் களை நீக்கி விட்டார்கள். நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றி தொழிலா ளர்களின் அடிப்படை உரிமைகளை பறித்து தொழிற்சங்க உரிமையையும் பறித்து தொழிலாளர்களை அத்துக் கூலிகளாக மாற்றி விட்டார்கள். அதே போல் விவசாயிகள் விரோத மக்கள் விரோத அரசியல் சாசன விரோத சட்ட திருத்தங்களை எதிர்த்து நாடாளுமன் றத்தில் பேசியதுடன் இடதுசாரிகள் எதிர்த்து வாக்களித்துள்ளோம். ஒரு எம்பி க்கு நாடாளுமன்ற தொகுதி நிதியாக ரூ. 5 கோடி ஒரு ஆண் டுக்கு வழங்கப்படுகிறது. அந்த நிதிக் கும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்துள் ளது மோடி அரசு. ஆக எம்.பி. நிதியில் ஜிஎஸ்டி வரி போக ஒரு சட்டமன்ற தொகு திக்கு 62 லட்சம் ஒதுக்கலாம். ஒரு சமு தாயக்கூடம் கட்டினாலே இது செல வாகிவிடும். இந்நிலையில், என்ன செய் தீர்கள் என்று பாஜகவினர் கேட்கிறார் கள். செய்வதற்கு ஒன்றிய அரசு என்ன கொடுத்தீர்கள் என்று நாங்கள் கேட்கி றோம். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 18 கோடி ஒதுக்க வேண்டும். ஆனா 4 கோடி தான் ஒதுக்கப்படுகிறது. இதில், கொரோனாவை காரணம் காட்டி ஓராண்டு முழுமையாக 5 கோடி நிதியை ரத்து செய்து விட்டனர். அடுத்த வருடம் 3 கோடியை ரத்து செய்துவிட்டனர். ஐந்து வருடத்தில் ரூ.17 கோடி தான் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஜிஎஸ்டியை கழித்து விட்டால் சுமார் ரூ.14 கோடி தான் கொடுத்துள்ளனர். இதில் என்ன செய்தார் என்று கேட் பதற்கு பாஜகவினருக்கு வெட்கமாக இல்லையா? பெருந்துறை சட்டமன்றத் தொகு தியில் மூன்று இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். அதிமுக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பொழுதும் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. நான் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினேன். ஐந்தாண்டு காலம் நீண்ட போராட்டம் நடத்தி மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ 93 கோடியே 60 லட் சம் ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப் பட்டு பணிகள் தொடங்க உள்ளது. காஞ் சிக்கோவில் பிரிவு, சித்தோடு, துடுப் பதி அருகே இந்தப் பாலங்கள் கட்டப்ப டுகிறது. பல்ல கவுண்டம்பாளையம் பகு தியில் பள்ளி இருக்கும் பகுதியில் நடை மேம்பாலம் கட்டுவதற்கும், மாக்கி னாம் கோம்பை அருகே நடை மேம் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.87 லட்சம் செலவிடப்பட் டுள்ளது. பர்கூர் மலையில் மலையாளி என்ற பழங்குடி மக்களுக்கு பழங்குடி இனச் சான்று தருவதில்லை. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பழங்குடியினச் சான்று மலையாளி மக்களுக்கு வழங் கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட் டும் தருவதில்லை. இதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஒன்றிய பழங்குடி துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவர்கள் மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரடி யாக சந்தித்து இப் பிரச்சனை குறித்து கூறினேன். தமிழ்நாடு அரசும் பரிந்துரை கடிதம் கொடுத்துவிட்டது. ஆனால் இது வரை ஒன்றிய அரசு ஈரோடு மாவட்டத் தில் இருக்கும் மலையாளி என்ற பழங் குடி மக்களுக்கு சான்றிதழ் வழங்குவ தற்கு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்ற பாஜக நோக்கத்தில் அவர்கள் செயல்படுகின்றனர். வெள்ளத்தில் தமிழ்நாடு பாதிக்கப் பட்டபோது பார்க்க வராத பிரதமர் மோடி தற்போது ஓட்டு வேட்டையாட வருகிறார். இவர்களுக்கு கேள்வி கேட்க தார்மீக அருகதை கிடையாது. என் பணிகளைச் சொன்னால் ஒரு கோடி தருவதாக ஒரு பேப்பர் அறி வித்தது. அந்தத் தொகையைக் கொண்டு வாருங்கள். தொகுதி வாரி யாக என்னென்ன பணிகள் செய்துள் ளேன் என்ற பட்டியலை நான் தருகி றேன். அந்த ஒரு கோடியை அனாதை இல்லங்களுக்கு தருகிறேன் என்று முன்கூட்டியே அறிவிக்கிறேன் என்று சொன்னேன்.
ஆனால் இன்றுவரை அவர்கள் வரவில்லை, பதிலும் இல்லை. திருப்பூர் ரயில் நிலை யத்தை விரிவுபடுத்துவதற்கு இட மில்லை. எனவே ஊத்துக்குளி ரயில் நிலையத்தை ரயில் சந்திப்பாக மாற் றலாம். அதேபோல் வஞ்சிபாளையத் தில் இருக்கும் சரக்கு ரயில் முனை யத்தையும் ஊத்துக்குளியில் நிறைய இடம் இருப்பதால் அங்கு மாற்ற வேண்டும் என்றும் ஒன்றிய அரசிடம் முயற்சி மேற்கொண்டேன். அது பரிசீல னைக்கே இன்னும் வரவில்லை. திருப்பூருக்கு ஆதாரம் பனியன் தொழில். இந்த சிறு தொழிலுக்கு ஏன் ஜிஎஸ்டி விதிக்கிறார்கள்? ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ரத்து செய்ய மறுத்து விட்டனர். போட்டியிடும் பிஜேபி பதில் சொல்லுமா? கார்ப்பரேட் வரியை 32 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகி தமாக ஏன் குறைத்தீர்கள் என்று பாஜக பதில் சொல்லுமா? இதனால் வருடம் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற் படுகிறது. அதை கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகையாக கொடுத்துள்ளனர். ஏன் ஜிஎஸ்டியை, எம்எஸ்எம்இக்கு ரத்து செய்யக்கூடாது? அதேபோல் கல்வி கடன் பெற்று படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காதபோது அந்த கல்விக் கடனை ரத்து செய்ய வேண் டும் என்று நாடாளுமன்றத்தில் கேட் டேன். ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்விக் கடனை ரத்து செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இவர்களின் பிரதிநிதியாக தான் பாஜக வேட்பாளர் ஓட்டு கேட்டு வருகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாதவர் கள் அவதூறு செய்து வெற்றி பெற பார்க்கிறார்கள். இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக தோல்விய டையும். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றார்.