districts

img

தமிழகத்தைப் போல் வலுவான கூட்டணி இல்லாததால் பாஜக வெற்றி

ஈரோடு, மார்ச் 11- தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 2,600 டன் அரிசி ஈரோட்டுக்கு வந்தது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட் கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக, தெலுங்கானா மாநிலம் நாகிரெட்டிபள்ளி பகுதியில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் தெலுங்கானாவில் இருந்து  தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து, ரயிலில் வந்த அரிசி  மூட்டைகளை தொழிலாளர்கள்  லாரிகளில் ஏற்றிய பின்னர்  அரிசி மூட்டைகள் ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.