districts

அதிமுக மிரட்டலுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, பிப்.14- தமிழக சட்டமன்றத்தை முடக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் மிரட்டலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரி வித்துள்ளார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார் பில் சென்னை மாநகராட்சி 123 ஆவது வார் டில் சிபிஎம் வேட்பாளராக எம்.சரஸ்வதி போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (பிப்.12) தேனாம்பேட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்கு  சேகரித்தார். அப்போது அவர் பேசுகை யில், மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர்  முடக்கி வைத்துள்ளார். இதை ஜெய லலிதா இருந்திருந்தால் ஆதரித்து இருக்க மாட்டார். அதை கண்டிக்க தைரியமில்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழக சட்டமன்றத்தை முடக்குவோம் என மிரட்டுகிறார். இதை ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட் டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தோற்ற பிறகும் அதிமுக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழக சட்டமன்றத்திற்கு 2024ல் தேர்தல்  வரும் எனவும் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறி வருகிறார். ஒரேநாடு, ஒரே தேர்தல் என மோடி தூக்கத்தில் உளறுவதெல்லாம் சட்ட மாகாது. அதிமுக பாஜகவின் கிளை அமைப் பாக மாறியுள்ளதால் இதுபோன்று உளறு கிறது. உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத் தாமல் ஊழல் மயமாக்கி வைத்திருந்தது.  கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் பூசப் பட்ட சிமெண்ட் காற்றிலும், தண்ணீரிலும் கரைகிறது. அந்தளவிற்கு ஊழல் செய்து வைத்திருந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடுகளில் இருந்து கைப் பற்றபட்ட பணம் அனைத்தும் இப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். இப் படி அமைச்சர்கள் மீது வரும் புகார்களை  திசைதிருப்ப ஆளுநரை சந்தித்து ஏதாவது  கூறி திசை திருப்புகிறார்கள். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் வென்றத்தைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றி  பெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பிரச்சாரத்தின் போது மயிலாப் பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. வனஜகுமாரி, எஸ்.குமார், சுந்தர், பகுதிச் செயலாளர்கள் நந்தனம் மதி (திமுக), ஐ.ஆர்.ரவி (சிபிஎம்), திமுக வட்டச் செய லாளர் வில்லவன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.