சேலம், மே 30- பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து குமாரபாளையத்தில் பத்திரிகை யாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தமிழகப் பத்திரிகையாளர்களை அவம திக்கும் வகையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாம லையை கண்டித்து, தமிழக நிருபர்கள் சங் கத்தின் மாநிலத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் குமாரபாளையத்தில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டு பாஜக கட்சி தலைவர் அண்ணா மலைக்கு எதிராக கண்டன முழக்கமிட்ட னர்.