கோவை, டிச. 11- ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை யில் கொள்ளையடித்த விஜய் என்ற நபரை, இரு வாரங்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் தங்க நகை கள் மீட்கப்பட்டது. கோவை காந்திபுரம் நூறு அடி சாலையில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 28 ஆம் தேதி 4.8 கிலோ (575 சவரன்) தங்கம், வைரம், பிளாட்டி னம் உள்ளிட்ட நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டது. நகைக் கடைக்குள் இருந்த இரண்டு அடி இடைவெளியை பயன்படுத்தி கொள்ளை சம்பவம் நடை பெற்றது. இதுகுறித்து விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல் வேறு கோணங்களில் விசாரணை நடை பெற்றது. இந்த கொள்ளை சம்பவத் தில் தருமபுரியை சேர்ந்த விஜய் என்ப வர் ஈடுபட்டு இருப்பதும், அவர் சமீபகா லமாக, பொள்ளாச்சி ஆனைமலை பகு தியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு விஜ யின் மனைவி நர்மதா மற்றும் அவரது மாமியார் யோகராணி ஆகியோர் உடந் தையாக இருந்தது தெரியவந்தது. இத னைத்தொடர்ந்து விஜயின் மனைவி நர்மதாவிடமிருந்து நவம்பர் 30 ஆம் தேதி 3.2 கிலோ தங்க நகைகளை பறிமு தல் செய்த போலீசார் நர்மதாவை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தருமபுரி மாவட்டம் தும்ப லஹள்ளியில் உள்ள இலங்கை அகதி கள் முகாமில் இருந்த விஜயின் மாமி யார் யோகராணியை கைது செய்த னர். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்த னர். நகைகளை குப்பைத் தொட்டியி லும், சாலை ஓரத்திலும் புதைத்து வைத் திருந்த நிலையில் அவற்றை மீட்டனர். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி தருமபுரி மாவட்டம் தேவரெட்டியூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த விஜய் வீட்டில் 38 கிராம் நகையை வைத்து விட்டு சென்றதாக காவல்துறையி னருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜ யின் தந்தை முனிரத்தினத்திடம் விசா ரணை மேற்கொண்டனர். இந்நிலை யில் ஆறாம் தேதி இரவு விஜயின் தந்தை முனிரத்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைக ளில் பெரும்பாலானவை மீட்கப்பட்ட நிலையில் விஜய் தொடர்ச்சியாக தலைமுறைவாக இருந்து வந்தார். ஐந்து தனிப்படை போலீசாரும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியில், ஐயப் பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீ சார் காளஹஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் தற்பொழுது தனிப்படை போலீசாரால் கோவை அழைத்து வரப்படுகிறார். விஜய்யி டம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக் குப் பிறகு கொள்ளையன் விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக் கது. இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான விஜய் கைது செய் யப்பட்டுள்ள நிலையில், நகை கடை யில் இருக்கும் இடைவெளி குறித்து அவருக்கு தகவல் சொன்ன நபர் யார்? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு போலீசார் விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.