திருப்பூர், ஜூலை 10- திருப்பூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட கூட்டுத் தொழுகை நடை பெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே திருப்பூர் மாந கரப் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கான வர்கள் ஒன்று கூடி உலக அமைதி வேண்டி கூட்டுத் தொழுகை யில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.