districts

img

வெட் கிரைண்டர், பம்ப்செட்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உயர்வு

ஒன்றிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத் தில் வெட் கிரைண்டர், பம்ப்செட் கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கோவை தொழில்முனைவோரை கடும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. கிரைன்டரின் தாய் வீடான கோவையில் இந்த தொழிலே  இல்லாமல் போய்விடும் ஆபத்துள்ள தாக வேதனை தெரிவித்துள்ளனர்.  கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதிரி பாகங் கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தயாரிக்கும் வெட் கிரைண்டர் கள் உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. கோவை மாவட்டத்தில் மட்டுமே இவை தயாரிக்கப்படுவதால் கோவை வெட் கிரைண்டர்களுக்கு புவிசார் குறியீடு வழங் கப்பட்டுள்ளது.  ஜிஎஸ்டிக்கு முன்பு வெட் கிரைண்டர்களுக்கு 5 சதவீகிதமாக இருந்த வரி, ஜிஎஸ்டி அறிமுகமானபோது 28 சத வீகிதமாக உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் 12 சதவீத மாகவும், அதன் பிறகு 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. இதேபோன்று பம்ப்செட் உற்பத்தியும் அதிகப்படியாக உள்ளது. கோவையில் சுமார் 300 சிறு, நடுத்தர, பெரிய பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பம்ப்செட் உற்பத்தி  செய்யப்பட்டு நாடு முழுவதும் உள்ள விவ சாயிகள், வீட்டு உபயோகிப்பாளர்கள், நிறு வனங்கள் உள்ளிட்ட நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டிக்கு முன்பு இந்தத் தொழி லுக்கும் 5 சதவீத வாட் வரியே இருந்து வந் தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின்போது பம்ப்செட் மூலப்பொருள்களுக்கு 18 முதல் 28 சதவீத வரியும், அந்த பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பம்ப்செட்டுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இந்த குழப்பமான நடைமுறையை மாற்ற வேண் டும் என்று தொழில்முனைவோர் குரல் எழுப்பி வந்த நிலையில் பம்ப்செட்களுக் கும், அது தொடர்பான என்ஜினீயரிங் ஜாப்  ஆர்டர்களுக்கும் ஒரே மாதிரியான 12 சத வீத ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டு வரப் பட்டது. 

கோவை மாவட்டத்தின் சிறு, குறு  தொழில்களை பாதுகாக்க பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தொடர்ந்து நாடாளுமன்ற விவா தங்களில் பேசி வந்தார். மேலும் சிறுகுறு தொழில்முனைவோர்களோடு இனைந்து பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதன் விளைவாக வெட்கிரைண்ட ருக்கு 5 சதவீகிதம் ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தப்பட்டது.  இந்நிலையில்,  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டீ கரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடை பெற்ற இக்கூட்டத்தில் வெட் கிரைண்டர்கள் மீதான 5 சதவீத வரியை 18 சதவீதமாக வும், பம்ப்செட்கள் மீதான 12 சதவீத வரியை 18 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய் யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு கோவையைச் சேர்ந்த வெட் கிரைண்டர், பம்ப்செட் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப் புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்புத்தூர் வெட்கிரைண்டர், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆர். சௌந்திரகுமார் கூறுகையில், வெட் கிரைண்டர் தயாரிப்பு தொழில் கோவை யின் தனித்துவமான தொழில்களில் ஒன் றாகும்.

 ஜிஎஸ்டி, பொருளாதார மந்தநிலை, கொரோனா, மூலப்பொருள் விலை உயர்வு என பல்வேறு சிக்கல்களால் வெட் கிரைண் டர் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்ற னர்.  தற்போது ஜிஎஸ்டி உயர்வு என்ற வகை யில் மேலும் ஒரு தடைக்கல் வந்திருக்கி றது. ஏற்கெனவே அழியும் நிலையில் இருக் கும் இந்தத் தொழில், தற்போதைய 18 சத வீத ஜிஎஸ்டியால் காணாமல் போய்விடும் அபாயத்துக்கு வந்திருக்கிறது. இந்தத் தொழிலின் முக்கியத்துவத்தைக் கருதி, மீண்டும் 5 சதவீத வரியை விதிக்க ஒன்றிய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார். பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி உயர்வு குறித்து தென்னிந்திய பொறியியல் உற் பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கே.வி. கார்த்திக் கூறுகையில், வீட்டு உபயோக பம்ப்கள், கிணறு, ஆழ்துளை கிணறுகளுக் கான பம்ப்கள், நீர்மூழ்கி பம்ப் உள்ளிட் டவை மீதான ஜிஎஸ்டியை 12 இல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியிருப்பது, பம்ப் செட் மீதான விலையை மேலும் உயர்த் தும். ஏற்கெனவே மூலப்பொருள்கள் விலை உயர்வு காரணமாக பொருள்களின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், மேலும் எங்களது தயாரிப்புகள் மீதான  விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகய் தான் பாதிக்கப்படுவார்கள். கூடுதல் வரி விதிப்பால் அரசுக்கு ஆண் டுக்கு சுமார் ரூ.300 கோடி வரைதான் வரு வாய் கிடைக்கும். ஆனால் விலை உயர் வால் தரமில்லாத பம்ப்செட்கள் அதிகரிக் கும். இதனால் மின்சார தேவையும், விவ சாயிகளுக்கு கூடுதல் இழப்பும்தான் ஏற் படும். இதனால் யாருக்கும் பலனில்லை என்பதால் வரி உயர்வை அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும், என்றார்.