ஈரோடு, பிப். 3- டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் ஊழியர் களின் பணிப் பாதுகாப்பு கேள்விக் குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழ கம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 200 மதுக்கடைகள் செயல் பட்டு வருகின்றன. இதில் மேற்பார் வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 1000க் கும் மேற்பட்டோர் பணியாற்றி வரு கின்றனர். பகல் 12 மணிக்கு கடை திறந்து இரவு 10 மணிக்கு கடையை மூடினாலும், அன்றைய விற்ப னைத் தொகையை, இருப்பை சரி பார்க்க 2 மணி நேரத்திற்கு மேலா கும். இவர்களுக்கு ஊதியமாக ரூ.7 ஆயிரம் முதல் சுமார் 14ஆயிரம் வரை மட்டுமே ஊதியமாக வழங் கப்படுகிறது. மதுக்கடை பணியா ளர்கள் ரூ.5 முதல் 10 வரை கூடு தல் விலைக்கு விற்பனை செய்கின் றனர் என்ற பொதுவான குற்றச் சாட்டு உள்ளது. அதேசமயம் கடை யுடன் கூடிய மதுக்கூடங்களில் விற் கப்படும் பொருட்களின் விலை குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள கடையில் மது வாங்கிச் சென்றவர் சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து மதுபாட்டில் உடைந்துள்ள தாகவும், அதனை மாற்றிக் கொடுக் குமாறு கேட்டது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதா கக் கூறப்படுகிறது. இதனடிப்படை யில் அக்கடையில் பணியிலிருந்த குமாரை எந்த விசாரணையும் இன்றி மாவட்ட மேலாளர் அம்ச வேணி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு எந்த விசாரணையுமின்றி இடமாறுதல், அபராதம் விதிப்பது உள்ளிட்ட நட வடிக்கைகள் ஊழியர்களை அதி ருப்தியடையச் செய்துள்ளது. இவ ரைப்போலவே சிஐடியு நிர்வாகி கள் சிலரும் தங்கள் பணியிடத்தி லிருந்து பந்தாடப்பட்டுள்ளனர் என் பதும் குறிப்பிடத்தக்கது. இது அரசு நிறுவனமான டாஸ்மாக் ஊழியர்க ளின் பணிப்பாதுகாப்பு கேள்விக் குள்ளாகியுள்ளது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.