districts

img

பாஜக அரசை கண்டித்து ஜன.26 வாகனப் பேரணி: அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

திருப்பூர், ஜன.19- தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை தீவிரமாக  மேற்கொண்டு வரும் ஒன்றிய பாஜக அரசை  கண்டித்து திருப்பூர் காந்தி நகர் பேருந்து நிலையம் முன்பு ஜன.26 ஆம் தேதி காலை 10  துவங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரை  வாகனப் பேரணி நடத்துவது என்று அனைத்து  தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங் கம் மற்றும் விவசாய கூட்டமைப்பு கூட்டம்  வெள்ளியன்று ஏஐடியுசி பனியன் பேக்டரி  லேபர் யூனியன் அலுவலகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு கட்டுமான சங்க  சம்மேளன மாநிலச் செயலாளர் குமார், சிஐ டியு பனியன் சங்க பொதுச் செயலாளர் சம்பத்,  அகில இந்திய விவசாய சங்க மாவட்ட தலை வர் மதுசூதனன், மாவட்டச் செயலாளர் சின்ன சாமி, ஏஐடியுசி பனியன் சங்க பொதுச் செய லாளர் என்.சேகர் எல்பிஎப் மாவட்ட துணைத்  தலைவர் ரங்கசாமி, எல்பிஎப் சுகாதார சங்க  செயலாளர் அறிவழகன், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் பெருமாள், எச்எம்எஸ் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துசாமி, துணை செயலாளர் ரகு, எம்எல்எப் மாவட்டச்  செயலாளர் மு.சம்பத், எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் மனோகரன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு  பல்வேறு சட்டங்கள் நிர்வாக, ஆணைகள்  மற்றும் கொள்கைகள் மூலம் தொழிலா ளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத  நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசியல் சட்டத்திற்கு விரோத மாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின்  உரிமைகளை மறுக்கிறது. ஊடக சுதந்தி ரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. பாலி யல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பாதிக் கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவாளி களை பாதுகாப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கு  மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கி றது. ஒன்றிய பாஜக அரசின் பேரழிவுக் கொள் கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் விவசா யிகள் மற்றும் மக்களின் பல்வேறு பிரிவுகள் பல முனைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய  தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக  அடுத்த கட்ட போராட்டமாக வரும் ஜன. 26  ஆம் தேதி நாடு முழுவதும் மாவட்ட தலைந கரங்களில் வாகனப் பேரணி நடத்துவது என்று  முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்ப டையில் திருப்பூர் மாவட்டம் காந்தி நகர் பேருந்து நிலையம் முன்பு ஜனவரி 26 காலை 10 துவங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரை வாகனப் பேரணி நடத்துவது என்று  முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த னர்.