districts

img

ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு: விவசாயிகள் முற்றுகை போராட்டம்

உடுமலை, அக்.4- ஜம்புக்கல் மலை பகுதியில் மோசடி  செய்து வருவாய்த்துறை ஆவணங்கள்  மாற்றப்பட்டதை ரத்து செய்ய வலியு றுத்தி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வருவாய்த்துறை ஆவணங்களை மோசடியாக வகை மாற்றம் செய்து ஆக் கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். அப்பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதனன்று உடுமலை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தை விவசாயி கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத் தினர். விவசாயிகள் வருவாய் கோட்டாட் சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம் ஆண்டியகவுண்டனூர் 2 கிராமம். க.ச.எண்.815 முதல் உள்ள பல சர்வே எண்களின் சுமார் 900 ஏக்கர் பரப்பில் அரசு நிலங்கள், அரசால் நில  உடமை மேம்பாட்டுத்திட்ட பணிகளின் போது 450க்கும் மேற்பட்ட ஏழை விவசா யிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. அவர்களின் சுவாதீனத்தில் வைத்து விவ சாயம் செய்து வந்தனர்.  இந்நிலையில் பருவமழை பொய்த்த காரணத்தினால் சிலர் தொடர்ந்து விவசாயம் செய்ய இயலா மல் போனது. இதனை தங்களுக்கு சாத கமாக பயன்படுத்திக் கொண்டு சுமார் 300 ஏக்கர் பரப்பில் உள்ள நிலங்களை ஜம்புக்கல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற நிறுவனம் மோசடியான  

கிரயம், ஆள் மாறாட்டம் மற்றும் குறைவு முத்திரைத்தீர்வை உள்ளிட்ட மோசடி கள் மூலம் பத்திரப்பதிவுகள் மேற் கொண்டு அதன் மூலம் வருவாய் துறை ஆவணங்களில் பெயர் மாறுதல் செய் துள்ளனர். மேலும் அருகில் உள்ள அரசு  புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தும், மேற்படி மலை பகுதியில் உள்ள மரங்களை அழித்தும் வன விலங்குகளை துன்புறுத்தியும் வருகின்றனர். மேலும், இதன் அருகில் உள்ள விவசாயிகள் தங்களின் விவ சாய நிலங்களுக்கு சென்று வர பயன் படுத்தி வந்த பொது வழியினை ஆக்கிர மிப்பாளர்கள் அடைத்து வைத்துள் ளனர், இதனால் விவசாயிகள தங்கள்  நிலங்களுக்கு சென்று விவசாயப் பணி கள் செய்ய இயலாத நிலை உள்ளது.  மேலும், இயற்கை நீர் வழிப்பாதையை அடைத்து சட்டத்திற்கு புறம்பாக குளம் அமைத்துள்ளனர். இதனால் மலை யின் கீழ்ப்பகுதியில் உள்ள விவசா யிகள் நீர் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே இந்த நிலங்களில் கடந்த  2016ஆம் ஆண்டு முதல் நடைபெற் றுள்ள விற்கிரையங்களை மறு ஆய்வு  செய்து அதில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை கண்டறிந்து, தொடர்பு டைய நபர்கள் மீது குற்றவியல் வழக்குப்  பதிய வேண்டும். மேற்படி குற்றச்செயல் கள் நடக்க உறுதுணையாக செயல் பட்ட அரசு அலுவலர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கவும், தங்கள் நிலங் களை மீட்டுத்தர வேண்டும் என கூறப் பட்டிருக்கிறது.