districts

img

தாளவாடியில் ஜமாபந்தி

ஈரோடு, மே 24- ஈரோடு மாவட்டம், தாளவாடி வட் டாட்சியர் அலுவலகத்தில் தாளவாடி  வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக் கான வருவாய்த் தீர்வாயம் (ஜமா பந்தி) நிகழ்ச்சி வருவாய் தீர்வாய அலு வலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை யில் நடைபெற்றது. தாளவாடி வட்டத்திற்குட்பட்ட மல் லன்குழி குரூப், பனகஹள்ளி குரூப், கெட்டவாடி, மரூர், தாளவாடி, திகி னாரை குரூப், பையண்ணபுரம், தல மலை, இக்கலூர் குரூப், ஹாசனூர் ஆகிய கிராமங்களுக்கான 1431 ஆம்  பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வா யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொது  மக்களிடம் இருந்து இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட  கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள்  பெறப்பட்டது. அனைத்து மனுக்களை யும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்க ளிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஜமாபந்தி நிகழ்ச்சி யில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் பதிவேடுகள், பட்டா  சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு,  நில அளவை பதிவேடு, வருவாய் வரை பட பதிவேடு, அ-பதிவேடு, சிறப்பு பதி வேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை சங்கிலி ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், 14 பயனாளிக ளுக்கு ரூ.3,23,615  மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 41 பய னாளிகளுக்கு ரூ.34.85 லட்சம் மதிப்பீட் டில் நத்தம் பட்டா மாறுதல் ஆணையி னையும் வழங்கப்பட்டது. உதவி இயக் குநர் (நில அளவை) சுப்பிரமணி, தாள வாடி வருவாய் வட்டாட்சியர் உமா மகேஷ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.