பாறைகள் விழுந்து வீடு சேதம்
ஈரோடு, நவ.6- அந்தியூர் அருகே ராட்சத பாறைகள் விழுந்ததில், வீடு சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே இரட்டை கரடு பகுதி யில் மலை அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் பெரிய, பெரிய ராட்சத பாறைகள் உள்ளன. மலை அடிவாரத்தில் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவர் வீடு உள்ளது. கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் ஸ்ரீதருடன் வீட்டில் வசித்து வருகிறார். இரட்டைக்கரடு பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, மகனுடன் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற் பட்டு, 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தன. இதில் சமையல் அறையின் ஒரு பகுதி மற்றும் வீட்டின் ஹால் இடிந்து விழுந்தன. மேலும், சமையலறையில் இருந்த ஸ்டவ், பாத்திரம், குடம் போன் றவை முற்றிலும் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக பாறைகள் கிருஷ்ணமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த அறையில் விழா ததால், குடும்பத்துடன் உயிர் தப்பினர். எனினும் அப்பகுதி மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாருக்கு சிறை
தருமபுரி, நவ.6- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே உள்ள கேத்து ரெட்டிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் எடுத்து விடும் வேலை செய்து வந்தவர் கோபால். கடந்த 2009 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்பு இவருக்கு அலுவலகத்தில் சேர வேண்டிய செட்டில்மெண்ட் தொகை பெறுவதற்கு, ஊராட்சி செயலாளர் சரவண னிடம் சென்று மனு அளித்துள்ளார். அப் போது, அவருக்கு சேர வேண்டிய ரூ.30 ஆயி ரம் செட்டில்மெண்ட் தொகையை பெறுவ தற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி செய லாளர் சரவணன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கோபால், தனது மகனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பமில்லாத கோபால் மற்றும் அவரது மகன் ஆகியோர் தருமபுரி யில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு கண்கா ணிப்பு பிரிவில் சென்று புகாரளித்தனர். மேலும், போலீசார் ராசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோபாலிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். அதை சரவணனிடம் கோபால் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார், சர வணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 14 ஆண்டுகளாக நடை பெற்று வந்தது. இந்நிலையில், தருமபுரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஊராட்சி செய லாளர் சரவணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார்.
சைக்கிளில் ஒளிரும் பட்டைகள்
கோவை, நவ.6- கோவை சிங்காநல்லுார் எஸ்.ஐ.எஸ்.எச்., காலனியை சேர்ந்தவர் சிதம்பரம்(75). இவர் கடந்த, 3ம் தேதி அதி காலை சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகில் வரும் போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில், அவர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். விசாரணையில், சைக்கிளில் இரவு நேரத்தில் ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படாததே விபத்திற் கான காரணம் என தெரிய வந்தது. இந்த விபத்தை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவு படி, அனைத்து காவல் எல்லைக்குட்ட பகுதிகளிலும், சைக் கிளை ஓட்டிச் சென்றவர்களுக்கு இரவு நேரத்தில் ஒளிரும் பட்டைகள், சைக்கிளை சுற்றிலும் ஒட்டப்பட்டு பாதுகாப்பாக செல்லுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
கோவை, நவ. 6- கோவை, சௌரியபாளையம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம் (27). தனியார் நிறுவன மேலாளரான இவர், அரசு வேலை பெற முயற்சி செய்து வந்துள்ளார். அச் சமயத்தில், கோவையை சேர்ந்த ரஞ்சித், ஜெகன், சூர்யா, மோகன் ஆகிய 4 பேர், மாணிக்கத்துக்கு அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.20.20 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட் டும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து பீளமேடு போலீசில் மாணிக்கம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் ரஞ்சித், ஜெகன், சூர்யா, மோகன் ஆகிய 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
விடுதி மாணவிகள் போராட்டம் எதிரொலி தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையர் நேரில் ஆய்வு
தருமபுரி, நவ.6- விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடு பட்டதன் எதிரொலியாக, தேசிய எஸ்சி/ எஸ்டி ஆணையர் சம்பந்தப்பட்ட விடுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டி மாணவிகள் தங்கும் விடுதியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 56 பேர் தங்கி படித்து வருகின்றனர். அண்மை யில் விடுதியில் கழிப்பறை, போதிய தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பள்ளி மாணவிகள் திடீரென விடுதி முன்புள்ள சாலையில் காலி பக்கெட்டுடன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் வயல்வெளி பகுதி முட்புதர் பகுதிக்கும் செல்வதாகவும், குடிநீர் வசதி, தண்ணீர் வசதி இல்லாததால் வயல்வெளிக் குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து குளிப்ப தாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டினர். இப் போராட்டத்தின் எதிரொலியாக, இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்வ தற்கு தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் எஸ்சி/எஸ்டி தமிழ்நாடு ஆணைய இயக்கு நர் ரவிவர்மன் பள்ளி மாணவியர் தங்கும் விடு திக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, துணை வட்டாட்சியர் மில் லர் மற்றும் போலீசார் ஆகியோர் உடனிருந்த னர்.
ஆர்.எஸ்.ஊத்துக்குளியில் பேவர் பிளாக் சாலை அமைக்க சிபிஎம் மனு
திருப்பூர், நவ.6- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.ஊத்துக்குளி சாலையிலிருந்து இரயில்வே நுழைவு பாலம் வழியாக காங் கேயம் சாலையை இணைக்கும் தார்ச் சாலையில் தற்போது புதுப்பிப்பு பணிகள் நடைபெறுகிறது. ரயில்வே நுழைவு பாலத்தின் இருபுறமும் விடுபடும் சுமார் 60 மீட்டருக்கு பேவர் பிளாக் சாலை அமைத்துத்தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாரநயக்கனூர் கிளை செயலாளர் எச்,மாரிமுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலத் கத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட் டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய சாலை தற்போது புதுப்பிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இச்சாலையில் இடையில் சுமார் 30 மீட்டர் நீளமுள்ள பாதை மண்சாலையாக விடப்பட்டுள்ளது. தற்போ துள்ள தார்ச் சாலையை புதுப்பித்தால், அதற்கும் மண் சாலைக்கும் 2 அடி உயரம் வித்தியாசம் இருக்கும். தார்ச் சாலையில் வரும் வாகனங்கள் கீழே இறங்கி ரயில்வே நுழைவு பாலத்தில் நுழைந்து மறுபடியும் தார்ச்சாலையில் ஏறு வதற்குச் சிரமம் ஏற்படும். இந்த குறைபாட்டை ஊராட்சி ஒன் றிய பொறியாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ரயில்வே நுழைவு பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் கான்கீரீட் போடப்பட்டுள்ளது. இருபுறமும் சுமார் 30 மீட்டருக்கு பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்தால் நடந்து செல்ப வர்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பயனுள் ளதாக இருக்கும். மேலும் தோப்பு தோட்டம், பிஆர்.நகர், கே.கே.நகர், நடுத்தோட்டம், ஜேஜே நகர், செட்டிபாளையம், குன்னம்பாளையம், மாரநாயக்கனூர் பகுதி மக்கள் ஊத் துக்குளி ஆர்.எஸ்.பகுதிக்கு சென்று வர ஏதுவாக இருக் கும். எனவே உடனடியாக இக்கோரிக்கையை நிறைவேற் றித் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாசற்ற தீபாவளி: தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு
அவிநாசி, நவ.6- அவிநாசி தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்த விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கினர். தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரை யும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டா சுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லா மல் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற் றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப் பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. பெரியர்கள் பார்வையில் பட்டாசு வெடிக்க வேண் டும். ஒரு பக்கெட் தண்ணீர், மணல் உள்ளிட்டவைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என் பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
இலக்கிய அமர்வு
திருப்பூர், நவ.6- தமுஎகச மாவட்டக் குழு நடத்திய இலக்கிய அமர்வு நிகழ்ச்சி கேஆர்சி சிட்டி சென் டரில் ஞாயிறன்று நடைபெற் றது. அ.லெனின் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி துசோ.பிரபாகர் பாடலுடன் தொடங்கியது. இதைத்தொ டர்ந்து கவிஞர் நிதர்சனா கவிதை வாசித்தார். சம்சுதீன் ஹீரா மற்றும் காளிதாஸ் ஆகி யோர் பேசினர், பள்ளி மாண வன் இளம் எழுத்தாளர் தமிழ் இனியனின் நாவலை ஆசிரி யர் சம்பத்குமார் அறிமுகம் செய்து வைத்தார். கூழாங் கல் திரைப்படம் குறித்து பழனிவேல்சாமி பேசினார். இந்நிகழ்வில், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாநி லக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், முன்னாள் மாநி லக்குழு உறுப்பினர் விழிப்பு நடராஜன் உட்பட பொது மக் கள் திரளானோர் பங்கேற்ற னர்.
யானை தந்தம் விற்க முயற்சி: 8 பேர் கைது
மே.பாளையம், நவ. 6- மேட்டுப்பாளையத்தில் யானை தந்தம் விற்க முயன்ற வேட்டை தடுப்பு காவலர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட னர். மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெறவதாக கிடைத்த தகவலின் அடிப்படை யில், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையி லான குழு கல்லார் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பிரதிஷ் மற்றும் சின்னபாண்டி ஆகியோர் யானை தந்தத்தை, சுப்பிரமணி என்பவரிடம் விற்பனை செய்ய முற் படுகையில், மறைந்திருந்த அலுவலர்கள் மூவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, மூவரிட மும் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜ்குமார் என்பவரிட மிருந்து தந்தத்தை வாங்கியதும், ராஜ்குமாருக்கு நஞ்சுண்டன் என்பவர் தந்தத்தை கொடுத்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்களுடன் குண சேகரன், மனோஜ் மற்றும் விளாமுண்டி வனச்சரகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் ஆகியோர் சம் மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வன உயி ரின சட்டம் 1972 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத் துறையினர், 8 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
நில அளவையாளர் மீது தாக்குதல்
கோவை, நவ.6- நில அளவையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(30). இவர் கடந்த 2 மாதங்களாக கோவை பீளமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, சாலை பணி நில அளவையாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று, விடு தியில் தூங்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 அடை யாளம் தெரியாத நபர்கள் விடுதிக்குள் புகுந்து சந்திரசேகரை சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பி சென்றதாக சொல்லப்படு கிறது. இதைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தி னர், காயமடைந்த சந்திரசேகரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார் அடையாளம் தெரியாத 2 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாலையோரம் வீசி செல்லப்பட்ட பூக்கள்
தருமபுரி, நவ.6- போதிய விலை கிடைக்காததால், விரக்தியடைந்த விவ சாயிகள் பூக்களை சாலையோரம் வீசிச்சென்ற நிகழ்வு கவ லையை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயி கள் அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வரு கின்றனர். இங்கு விளையும் பூக்களை தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் மொத்த வியா பாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கடந்த புரட்டாசி மாதம் பூக்க ளின் விலை குறைந்து, விற்பனை செய்யப்பட்டது. இதன்பின் விஜயதசமியை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்து கிலோ சாமந்திப்பூ ரூ.200க்கும், செண்டுமல்லி ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது பூக்களின் வரத்து அதிகரிப் பால் சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் கிலோ ரூ.5 முதல் முதல் ரூ.10க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால், விற்பனையாகாத பூக் களை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி செல்கின்ற னர். தருமபுரி - பென்னாகரம் சாலையிலிருந்து சேலம், கிருஷ் ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலை யோரத்தில் சாமந்தி மற்றும் செண்டு மல்லி பூக்களை விவ சாயிகள் கொட்டி சென்றுள்ளனர். விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்பதால் விரக்தியடைந்த விவசாயிகள் பூக்களை சாலையில் கொட்டிச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
ஈரோடு, நவ.6- சென்னிமலையில் மதநல்லிணக்க பொதுக்கூட்டம் நவ.9 ஆம் தேதியன்று நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், வர்த் தகர்களின் கோரிக்கை ஏற்று மாற்று தேதியில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், மக்களின் இறை நம்பிக்கையைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயத்திற்காக பதற்ற சூழலை உருவாக்க மதவாத சக்திகள் முயற்சித்தன. இதனை முறியடித்து மதநல்லிணக்கத்தை முன்வைத்து நவ.9ஆம் தேதி சிபிஎம், சிபிஐ கட்சிகளின் ஒருங்கிணைப் பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற் கிற பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலை யில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வணிகர்கள், வர்த்த கர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுக்கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், பருவமழை யைக் கருத்தில் கொண்டும் பொதுக்கூட்டம் ஒத்தி வைக் கப்படுவதாகவும், மாற்று தேதியில் இதர கட்சிகளின் தலை வர்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகு நடைபெறும் என சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.