districts

img

தருமபுரி, மார்ச் 19- திமுக கூட்டணியை வெற்றிபெற செய்வது புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி தீர்மானம்

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் 84 ஆம் ஆண்டு விழா மற்றும் சர்வதேச மக ளிர் தின கருத்தரங்கம் தரும புரியில் நடைபெற்றது. மாவட் டக்குழு உறுப்பினர் எஸ். புவனா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இ.பி. புகழேந்தி சிறப்புரையாற்றி னார். இக்கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்பு களில் பதவி வகிக்கும் நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி பெண் தலைவர்கள் சுய மாக செயல்பட வழிவகுக்க வேண்டும். பெண் தலைவர்களின் கணவர்கள், உறவி னர்களின் தலையீட்டை தடுத்து, பெண்கள்  சுதந்திரமாக செயல்பட மாவட்ட நிர்வாக மும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தாதது கண்டிக்கத்தக் கது. எனவே, தேர்தல் முடிந்தவுடன் அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக ளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள்  கடன் வழங்கும் போது சில தொண்டு நிறு வனங்கள் பணம் பறிக்கும் வேலையை செய்கிறது. எனவே இதனை தடுக்க வங்கி களே நேரடியாக மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி யின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சா ரம் செய்து வெற்றிபெற செய்வது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.காசியம்மாள், யுடியுசி மாவட்டச் செயலாளர் த.மு.சண் முகம், ஒன்றியச் செயலாளர் பி.காவேரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் யு.கோவிந் தசாமி, எஸ்.எம்.அம்மாசி, டி.மணி, மாதர் சங்க வட்டச் செயலாளர் சி.லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.