“கற்பக விருட்சமான தென்னை யின் சார் பொருள்கள் எல்லாமே இயற் கையானதே!” ரசாயனம் இல்லாமல் தயாராகும் தென்னை நாறும், பித் தும், மண்ணை நாசம் செய்யாது, மண்ணை வளப்படுத்தும். உலகத்தில் 106 நாடுகளுக்கு ஆண்டுக்கு ரூ 4,000 கோடி அந்நிய செலவாணியை ஈட்டி தரும் தொழிலாக தென்னை சார்ந்த தொழில் உள்ளது. உழவுத் தொழிலில் இருந்து சிறு உயர்வு பெற்று மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக நாறும், பித் தும் உற்பத்தி செய்தோம் பிறகு உழவு தொழில் இருந்து கொண்டே இயற்கை தொழிலான தென்னை சார்ந்த தொழிலை செய்வது குற்றமா?. நிலத் தில் ஒரு பகுதியில் தொழிற்சாலை இருக்கிறது, மறு பகுதியில் விவசா யம் இருக்கிறது. எம் மண்ணை நாமே நாசம் செய்வோமா? ஆனால், இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஆரஞ்சு நிறமாய் அறிவித்துள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கர்நாடகா விலும், கேரளாவிலும், ஆந்திரா விலும் இல்லாத விதிகளை தமிழகத் தில் அவசர, அவசரமாக வெளியிட்டது ஏன்? முழுமையான ஆய்வுக்கு உட் படுத்தாமல் இத்தொழிலை செய்ய முடி யாத அளவிற்கு வாரியத்தின் விதிகள் ஒருதலைபட்சமாக வெளியிட்டது ஏன்?.
தென்னை விவசாயிகள், சார் தொழில் புரிவோர், வேளாண்மை பல் கலைக்கழகம், விவசாய விஞ்ஞானி கள், தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை இணைந்து விவாதித்து வெளிப் படையான ஆய்வுகளை மேற் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிட வேண்டும். தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் எல்லாம் பொருத்தமற்றவை. தென்னை சார் தொழிலில் ஏற்பட் டுள்ள நவீன மாற்றங்களில் தண்ணீர் இல்லாமல் நார் தயாரிப்பதும், விவசா யிகள் தங்கள் நிலங்களில் ஒரு பகுதி யில் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வரை உலர்த்தி எடுத்து வருமானம் பெறுவ தும் பின்பு அந்நிலத்தில் விவசாயம் செழித்து வளர்வதும் இயற்கையான அனுபவமாக உள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பல ஆண்டு கால அனுப வத்தில் மண்ணில் ஏற்படாத பாதிப்பு களை, ஏற்படுவதாக, கற்பனை யாக கருதி இப்போது வெளியிட் டுள்ள நிபந்தனைகள் உள்ளன. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக் கும் எவ்வித பாதிப்பும் இன்றி இத் தொழிலை நடத்திட நாங்கள் தயா ராக இருக்கிறோம். ஆகவே, நம் மண்ணை காக்க அனுபவங் களோடு விவாதித்து அரசுக்கும், வாரியத்திற்கும் நம் சிரமங்களை போக்கிட கோருவோம். திட்டமிட்டு நிர்வாக தந்திரத்தோடு முறைகேடுகள் மூலம் தென்னை விவசாயிகள் பாதிப் படைவதையும், சார் தொழில் செய் வோரை அலைக்கழிப்பதை அனுமதி யோம்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படுத்தியுள்ள விதிகள் பெரும் பகுதி தேவையற்றவை, வாரியத்தின் வழிகாட்டுதலை நிறைவேற்ற முழு மானியம் வழங்கிட கோருவோம். தென்னை சார் தொழில்களை காக்க வும், தென்னை விவசாயம் காக்கவும் விவாதிப்போம்! ஒன்றுபடுவோம்! போராடுவோம். தமிழ்நாடு தென்னை சார் தொழில் கூட்டமைப்பு (TCBF)