districts

விளைநிலங்களில் மின்வேலி: அனுமதி பெறுவது அவசியம்

உதகை, செப்.12- காப்புக்காட்டிலிருந்து 5 கி.மீ.  தொலைவில் உள்ள விளைநிலங் களுக்கு மின்வேலி அமைக்க வனத் துறையினரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என அதி காரிகள் தெரிவித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பக வனச்சர கங்கள், நீலகிரி வனக்கோட்டத்துக் குட்பட்ட வன எல்லையோர பகுதிகளில்  வனவிலங்குகளை பாதுகாக்க பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயர் மின்னழுத்த வேலி களால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. வன விலங்குகளை பாதுகாக்க மின்வேலி கள் அமைப்பதற்காக தரப்படுத்தப்பட்ட  அளவுகோலுடன் கூடிய விதிமுறை களை நிர்ணயிப்பது இன்றியமை யாததாகும். அதேவேளையில் காடு களை ஒட்டியுள்ள பகுதிகளில் வன விலங்குகளால் சேதமடையும் விளைப் பொருட்களை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலனை பேணுதலும் அவசியமாகும். இதன் முதல் முயற்சியாக தமிழ் நாடு அரசு மின்வேலிகள் (பதிவு மற்றும்  ஒழுங்குமுறை) விதிகளை அறிவித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மின்வேலிகள் மற்றும் சூரிய  சக்தி மின்வேலிகளை பதிவு செய்வதை யும், தரப்படுத்தவும், ஒழுங்குப்படுத்த வும் வழிவகுக்கும். அதன்படி அரசு அறிவித்துள்ள விதிகளின் முக்கிய அம்சங்கள்: சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயமா கிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின் வேலிகளை பதிவு செய்வது கட்டாயம்.  இந்த விதிகள் தமிழ்நாடு அரசால் அறி விக்கை செய்யப்பட்ட காப்புக்காடு களில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விளைநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். மின்வேலிகளை அமைக் கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளுக்கும் இவ்விதி களில் நிர்ணயிக்கப்பட்டு உள்ள பிஐஎஸ் தர நிலைகளான பிஐஎஸ்-302-2-76 (இந்தியா) விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். காப்புக் காட்டில் இருந்து 5 கி.மீ. தொலை வுக்குள் ஏற்கனவே மின் வேலிகளை அமைத்திருப்பவர்கள் தங்கள் மின் வேலிகளை அந்தந்த பகுதியில் உள்ள  வன அலுவலர்களிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கள் கூறுகையில், இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங் கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்வேலி அமைப்பது குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது, என்றனர்.