தமிழகத்தின் பனியன் நகரம், டெக்ஸ்டைல் சிட்டி என திருப்பூர் மாவட்டம் அழைக்கப்படும். இம்மா வட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் பின்னலாடை தொழி லையே நம்பி உள்ளது. பண மதிப்பி ழப்பு, ஜிஎஸ்டி, நூல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, வங்கதேசத்தில் உற்பத்திச் செலவு குறைவு என்பதால், ஆர்டர்கள் அங்கு செல்வதாலும், திருப்பூர் பனியன் தொழில் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளது என பின்ன லாடை தொழில்துறையினர் கூறி வரும் நிலையில், அது எப்படி தொழி லாளர்களையும், அதன் சார்பு தொழில்களையும் பாதித்துள்ளது என நமது தீக்கதிர் நாளிதழுக்க ஒரு சுற்று வந்தபோது… ருக்குமணி: (டெய்லர்) அருகில் உள்ள பனியன் கம்பெ னியில் ஓவர்லாக் டெய்லராக உள் ளேன். முன்பு போல இப்போது வேலை இருப்பதில்லை. முன்பெல் லாம் இரவு சிப்ட் வேலை இருக்கும். இப்போது ஓரு நாளைக்கு ஒரு சிப்ட் கிடைப்பதே சிரமமாக உள்ளது. நேற்று அரை சிப்ட் வேலை இருந்தது. இன்று வேலை இல்லை. பல சிறிய பனியன் கம்பெனிகள் முடிவிட்டனர். பெரிய கம்பெனிகள் மட்டும் இயங்கு கிறது.
ஜாபர் சாதிக்: (டூ வீலர் மெக்கானிக்)
நான் 30 ஆண்டுகளாக பழுதான இருசக்கர வாகனத்தை சீர் செய்யும் பணி செய்து வருகின்றேன். கடந்த 5 ஆண்டுகளாக வேலை சுமாராக தான் உள்ளது. எங்கள் தொழிலில் டயர், ஆயில் உட்பட அனைத்து உதிரி பாகங் களும் விலை ஏறிவிட்டது. உதாரணத் திற்கு 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆயில் இப்போது 450 ரூபாய்க்கு விற் கப்படுகிறது. பொருட்களின் விலை அதிகரித்த அளவிற்கு கூலி உயர வில்லை. திருப்பூர் பனியன் தொழில் மந்தமாகிவிட்டது. மக்கள் மத்தியில் பணம் இருப்பதில்லை. குறிப்பாக திருப்பூரில் நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களால்தான் இந்த பிரச்சனையே வந்தது என் றார்.
பாப்பா: (சலவைத்
தொழிலாளி)
இப்பகுதியில் 6 ஆண்டுகளுக்கு மேலாக துணிகளுக்கு அயன் செய்து தரும் தொழில் செய்து வருகிறேன். கொரனா காலம் முதல் சரியாக துணி அயன் செய்ய யாரும் துணி தருவ தில்லை. குறிப்பாக இப்பகுதியில் குடி யிருந்தவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு சென்றுவிட்ட்னர். முன்பெல் லாம் நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ. 450 வரை வருமானம் வரும்,. இபோது 170 ரூபாய் வருவதே சிரமமாக உள் ளது. ஒரு சிப்பம் அரசி 250 ரூபாய் உயர்ந்துள்ளது. வேலையும் இல்லை. விலை வாசியும் உயர்ந்துட்டே இருந்த என்ன செய்ய முடியும். காமாட்சி: (வீட்டு வேலை) சமையல் செய்வது, துணி துவைப் பது போன்ற வீட்டு வேலை செய்து வரு கின்றேன். மாதத்திற்கு ரூ.4 ஆயிரம் சம்பளம். கணவரும், மகனும் பனியன் கம்பெனியில் பேக்கிங் வேலை செய்து வருகிறார்கள். கணவருக்கு வாரத்தில் இரண்டு நாள் தான் வேலை இருக்கிறது. மகன் வேலை இல்லா மல் ஊருக்கு சென்றுவிட்டான். மொத்த குடும்ப வருவாய் வைத்து குடும்பம் நடத்தவே சிரமமாக உள் ளது. வீட்டு வாடகை, காய் கறி என அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிட்டது. ரேசன் அரசி இல்லை என்றால் எங்களுக்கு உணவே இருக்காது என்கிற நிலை தான் சாமி.
மணி: (சாக்கு தைக்கும் தொழிலாளி)
20 ஆண்டுகளாக மூட்டை போடு வதற்கு பயன் படுத்தப்படும் சாக்கு தைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்த இந்த இடத்திற்கு மாதம் 500 ரூபாய் வாடகை. இந்த வாடகை குடுப் பதற்கு கூட வருமானம் வருவ தில்லை. 3 வருடத்திற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும். இப்போலாம் ஒரு சில நாள் டி குடிக்க கூட காசு இருக்குற தில்லை. நம்மகிட்ட சக்கு தைக்க வர தெல்லாம் சின்ன கம்பெனிகாரங்க தான் வருவாங்க. இப்போ அவங்க ளுக்கே வேலை இருக்கிறதில்லை அப்புறம் நமக்கு எங்க அவங்க வேலை தருவாங்க. லட்சுமி: (செக்கிங்) நான் செக்கிங் வேலை செய்றேன். ஒண்ணரை வயசுல ஒரு குழந்தை இருக்குறதால கம்பேனிக்கு போக முடியாது. வீட்டுக்கே கொண்டுவந்து பீஸ் போடுவாங்க. ரோப் கோற்பது, பிசிறு வெட்டுறது, கை நூல் கோற்பது போன்ற வேலை செஞ்சி தருவேன். ஒரு பீஸ்க்கு 1 ரூபாய் இருந்து 2 வரை கிடைக்கும். வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு குழந்தைகளை தூங்க வச்சுட்டு வேலை செஞ்சா நாள் ஒன் றுக்கு150இல் இருந்து ஒரு 200 பீஸ் பார்ப்பேன். ஒரு வாரத்துக்கு ரூ.1000 இருந்து 1200 ரூபாய் கிடைக்கும். இப் பல்லாம் கம்பெனி சிப்ட்டுக்கே வேலை இல்லை. அதனால எங்க ளுக்கு பீஸ் கொண்டு வந்து தரதில்ல. இப்ப சும்மாதான் இருக்கேன்.
ராஜூ: (புலம்பெயர் தொழிலாளி)
நான் பீகார் இருந்து இங்க வந்து கட்டிட வேலை செய்கிறேன். எங்க சொந்தகாரர் இங்கே வேலை செஞ்சா நல்ல காசு கிடைக்கும்னு கூட்டிட்டு வந் தாரு. வந்த புதுசுல வேலை நிறைய கிடைச்சுது. ஒரு நாளைக்கு 600 ரூபாய் கூலி. இங்க இருந்து வீட்டுக்கு காசு அனுப்புவேன். இப்போ வேலையே இல்ல என் செலவுக்கே காசு இல்லாத நிலைதான் இருக்கு. இங்க இருக்கிற நிலைமைய பார்த்தா பீகாருக்கே போக வேண்டியதுதான்னு நினைக் கிறேன்.
கண்ணன்: (டீ கடை)
நான் ரயில்வே ஸ்டேசன்ல பக் கத்துல டீ கடை வச்சிருக்கேன். அது னால எனக்கு வியாபாரம் சுமாரா இருக்கு. எனக்கு ரெகுலர் கஸ்டமர் இல்லை. ஸ்டேசனுக்கு வரவங்க டீ குடிப்பாங்க. ஆனா, முன்னெல்லாம் திருப்பூருக்கு வரவங்க அதிகமா இருப்பாங்க. இப்போ இங்க இருந்து போறவங்கதான் அதிகமாக இருக் கிறாங்க. அது மட்டும் நல்லா தெரியுது. இது எல்லாதுக்கும் காரணம் பனியன் தொழில் மந்தமா இருக்குறது தான். இங்க இருக்குர எல்லாத் தொழிலும் பனியன் தொழில சார்ந்து தான் இருக்கு. பனியன் தொழில் இல்லனா வேற எந்த தொழிலும் நடக்காது. -லிவின்