districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாக்கடை கால்வாயில் குடிநீர் பிடிக்கும் அவலம்

சாக்கடை கால்வாயில் குடிநீர் பிடிக்கும் அவலம் சேலம், பிப்.17- தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வா யில் குடிநீர் பிடிக்கும் அவலத்தை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், தேவூர் பேரூராட்சி, 9 வார்டுக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பேரூராட்சி சார் பில், மக்கள் பயன்பாட்டிற்காக சாலையோரம் குடிநீர் குழாய் அமைத்து, காவிரி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், சாக்கடை கால்வாய் முறையாக அமைக்காததால், குடிநீர் குழாயை சுற்றி கழிவுநீர் செல்கிறது. அதிலேயே குடங்களை  வைத்து தண்ணீர் பிடிக்கும் அவல நிலைக்கு பொதுமக் கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தண்ணீரை பயன்படுத் தும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரியிடம் மக்கள் பலமுறை  தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.

சிபிஎம் கிளைச் செயலாளர் மீது கொடூர தாக்குதல் காவல் ஆய்வாளர் மீது கண்காணிப்பாளரிடம் சிபிஎம் புகார்

தருமபுரி, பிப்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஸ்டீபன் ஜேசுபாதமிடம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, வட்டச் செயலாளர் டி.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் புகார் ஒன்றை  அளித்தனர். அதில் தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், தொட்டாரதஅள்ளியை சேர்ந்த பி.துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக செயலாற்றி வருகி றார். இவரது சகோதரர் பிரச்சனை காரண மாக மாரண்ட அள்ளி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, பேசிக்கொண்டே  இருக்கும் போது, எதிர்தரப்புக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய் வாளர் ஜீவானந்தம், காவலர் சம்பத் ஆகிய மூவரும் சேர்ந்து துரை மீது கொடூர தாக்கு தல் நடத்தியுள்ளனர். இதனால் அவரது கண்  மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற் பட்டுள்ளது. மேலும், போலீசாரை தாக்கியதா கக்கூறி அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். எனவே, துரை மீது போடப்பட்ட பொய்  வழக்கை திரும்பப்பெற வேண்டும். துரையை கடுமையாக தாக்கி மனித உரிமையை மீறிய, காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய் வாளர் ஜீவானந்தம், காவலர் சம்பத் ஆகிய  மூவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சரியான திட்டமிடல் இல்லாத சாலைப் பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி 

சரியான திட்டமிடல் இல்லாத சாலைப் பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி  கோவை, பிப்.17- அன்னூரில் முறையான திட்டமிடல் இல்லாமல் நடத் தப்படும், சாலை அமைக்கும் பணியால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில், குருக்கிலியாம்பாளையம் பகுதியில் இருந்து அன்னூர் நகரம் வரை, சாலை அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.   ஒருபுறம் போக்குவரத்து மறுபுறம் சாலை பணி என இது வரை நடந்து வந்தது.  இந்நிலையில், அது தவறி முறையான  திட்டமிடல் இன்றி, சாலை முழுவதையும் முடக்கி சாலை  அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப் பாளையம் - அன்னூர் சாலையில், போக்குவரத்து முடங்கி  கடும் நெரிசல் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த முடியாமல்,  போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு  மேட்டுப்பாளையத்தில்  இருந்து வரும் வாகனங்கள்  நல்லிசெட்டிபாளையம் வழி யாக 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிவிடபட்டுள்ளது. அதேபோல் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல் லும் வாகனங்கள் சிறுமுகை சாலையில் மாற்றிவிடப்பட்டுள் ளது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனம் கூட சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அழைக்க ழிக்கப்படுவதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

600 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

600 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் சேலம், பிப்.17- தலைவாசல் அருகே சட்டவிரோதமாக இருசக்கர வாக னத்தில் கடத்த முயன்ற 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்  துறையினர் பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய 2 பேரை  கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள முட்டல்  எலந்தவாரி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற் பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அருண் கபிலனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில், மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல்  தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகு தியில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில், 12 லாரி டியூப் களில் 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை கடத்த முயன்றது தெரி யவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் பிடித்து விசா ரணை செய்தபோது, இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையில் கள்ளசாராயம் தயார் செய்து வந்த தும், கள்ளக்குறிச்சி மாவட்டம், தொடரப்பட்டு பகுதியைச்  சேர்ந்த வெங்கடேசன் (24), தீர்த்தகிரி (23) என்பதும் தெரி யவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 600 லிட்டர் கள்ளசாராயத்தையும் பறி முதல் செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி ஆத்தூர் மாவட்ட  கிளைச் சிறையில் அடைத்தனர்.

உழவர் பாதுகாப்பு திட்டங்கள்  குறித்து விஏஓவை அணுகலாம்

உழவர் பாதுகாப்பு திட்டங்கள்  குறித்து விஏஓவை அணுகலாம் உதகை,பிப். 17-  முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு  செய்த விவசாயிகள் தங்களுக்குரிய கிராம நிர்வாக அலு வலர்களிடம் நேரிடையாக சென்று அனைத்து விவரங்க ளையும் கேட்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாது காப்பு திட்டம்-2011 திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குடும்ப  தலைவர்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 712 நபர்களும், அவர் களை சார்ந்துள்ள உறுப்பினர்களில் 1 லட்சத்து 38  ஆயிரத்து 329 நபர்களும் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயி ரத்து 1,041 நபர்கள் உள்ளனர். இவர்களின் விவரங்கள் உரிய  கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவேடுகளில் பராம ரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு அறிவிப் பின்படி நீலகிரியில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட் டத்தில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் ஆதார் எண், குடும்ப  அட்டை எண், தொலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பி னர்களை சார்ந்தவர்களின் ஆதார் எண், தொலைபேசி எண் ஆகிய அனைத்து விவரங்களையும் கணினிமயமாக்கும் பணி கள் துவக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாய பெருமக்க ளாகிய அனைவரும் தங்களுக்குரிய கிராம நிர்வாக அலுவ லர்களிடம் நேரிடையாக சென்று அனைத்து விவரங்களை யும் வழங்கி பயன்பெற்று கொள்ளலாம். என்றார்.

சாலையை சீரமைக்கக்கோரி  பொதுமக்கள் கோரிக்கை

சாலையை சீரமைக்கக்கோரி  பொதுமக்கள் கோரிக்கை உதகை,பிப். 17- பந்தலூர் அருகே அம்பலமூலா தோட்டபுரா சாலையை  சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சி அம்பலமூலா முதல் தோட்டபுரா மற்றும் தேனம் பாடி, ஆதிவாசி மருத்துவமனை ஆகிய பகுதிகளில் ஏராள மான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மண்  சாலை கடந்த 40 வருடங்களாக சீரமைக்காமல் இருந்து வரு கிறது. இதனால், பள்ளி குழந்தைகள், ஆம்புலன்ஸ், ஜீப் என  எந்தவித வாகனங்களும் சென்று வர முடியாமல் மிகவும்  அவதிக்குள்ளாகின்றன.  சாலையை சீரமைக்க பலமுறை  கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழுதடைந்து குண்டும் குழியு மாக உள்ள இச்சாலையை விரைந்து தார் சாலையாக அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மைவி3 ஏட்ஸ் உரிமையாளர் விடுவிப்பு

மைவி3 ஏட்ஸ் உரிமையாளர் விடுவிப்பு கோவை, பிப்.17- கோவை மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், வியாழ னன்று இரவு கோவை சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார்.  மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவனம் குறித்தும், அந்த நிறுவ னத்தின் உரிமையாளர் சக்தி்ஆனந்த் மீதான புகாரைய டுத்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத் தனர்.  இந்நிலையில் சக்தி ஆனந்தன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரித்த நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, வியாழனன்று இரவு சக்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கபட்டார்.

ஜவ்வரிசியில் கலப்படம்: ஆலைக்கு அதிகாரிகள் சீல்

சேலம், பிப்.17. தலைவாசல் அருகே ரசாயனம் மூலம் ஜவ்வரிசி தயாரித்த ஆலைக்கு உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நட வடிக்கை எடுத்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம்,  சித்தேரி பகுதியில் அமைந்துள்ள நியூ சேகோ சர்வ் ஆலையில், உணவு பாதுகாப் புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சி.கதி ரவன், சேலம் சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் ஆகியேர் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அந்த ஆலையில் நான் ஃபுட் கிரேட் சோடியம் ஹைப்போ குளோரைடு கெமிக்கல் மூன்று கேன்கள்  இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், இந்த ரசாயனம் ஜவ்வரிசி தயாரிக்க  பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட் டது. இதையடுத்து சேகோ 13,200 கிலோ, ஸ்டார்ச் மில்க் 27,000 கிலோ, ஈர ஸ்டார்ச் மாவு  7,200 கிலோ, மக்காச்சோளம் 40 கிலோ, ஹைப்போ குளோரைடு கெமிக்கல் 120 லிட்டர் ஆகியவற்றை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார்  19 லட்சத்து 76 ஆயிரத்து 250 ரூபாய் ஆகும்.  பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த உணவு பாது காப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டு, ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்த னர். மேலும், இந்த ஆலை செயல்படா , வண்ணம் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உணவு மாதி ரிகளின் ஆய்வு அறிக்கையை பொறுத்து உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின் படி மேல்  நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சி.கதிரவன் தெரிவித்தார்.

பூக்கள் பூப்பதில் தாமதம் மா விளைச்சல் பாதிப்பு

தருமபுரி, பிப்.17- பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் காலநிலை மாற்றத்தால் இரண்டு மாதம் காலதாமதமாக மாமரத்தில் பூக்கள் பூத்துள் ளதால், விளைச்சல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப் பட்டு வருகின்றது. டிசம்பர், ஜனவரி மாதத் தில் வழக்கமாக மாமரங்களில் பூக்கள் பூக்கும். ஆனால், நடப்பு பருவத்தில் கால நிலை மாற்றத்தால் இரண்டு மாதம் கால தாமதமாக பிப்ரவரி மாதத்தில் பூக்கள் பூக்க  தொடங்கியுள்ளன. இதனால், கோடை வெயில், பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங் களால் விளைச்சல் கடுமையாக பாதிக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்க லம், ஜிட்டாண்டஅள்ளி, அண்ணா மலைஅள்ளி, குண்டாங்காடு போன்ற பகுதியில் செந்துரா, பெங்களூரா, அல் போன்சா, பீத்தர், மல்கோவா, நீலம், பங்க னப்பள்ளி போன்ற 30க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உற்பத்தி செய்யப்ப டுகின்றது. இங்கு விளையும் மாம்பழங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே போல் மா வகைகளை கொண்டு மாங்கூழ் (ஜூஸ்) தயார் செய்ய 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

துணை சுகாதார நிலையம் : அடிக்கல் நாட்டு விழா

துணை சுகாதார நிலையம் : அடிக்கல் நாட்டு விழா நாமக்கல்,பிப். 17- மோகனூர் ஒன்றியம் என்.புதுப்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில், என்.புதுப்பட்டி, ஜங்கலாபுரம், மேலப் பட்டி, ராமஉடையானூர், குப்பம்பாளையம் ஆகிய 5 குக்கி ராமங்களில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம  மக்கள் மருத்துவ வசதிகளை பெற்று வந்தனர். இந்நிலை யில், துணை சுகாதார நிலையத்தின் கட்டிடம் சிதிலம டைந்தது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, இதனை  இடித்து அகற்றி விட்டு, புதிய துணை சுகாதார நிலையம் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாயன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை  வகித்தார். எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் முன் னிலை வகித்தனர்.

இலவச வீட்டுமனை வழங்காத வருவாய்துறைக்கு ‘பூங்கொத்து’

நாமக்கல்,பிப். 17- இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்காத வருவாய்துறையினர் கவனத்தை ஈர்க்க துணை வட்டாட்சியருக்கு பொது மக்கள். ‘பூங்கொத்து’ கொடுத்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சி 3ஆவது வார்டு பகுதியில் பட்டியலின குடும்பங்கள் ஏராள மானோர் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு வெண்ணந்தூர் ஒன்றி யம் மின்னக்கல் பகுதியில் இலவச வீட்டு மனைக் கேட்டு ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 4 ஆண்டுக ளுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தி ருந்தனர். ஆனால், இதுவரையிலும் அம்மனு  மீது வருவாய்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ள னர்.  இதனைத்தொடர்ந்து, கடந்த சில  நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையி னருக்கு எதிராக கருப்புக்கொடி கட்டி  எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும்  எவ்வித அசைவுமின்றி இருப்பதால்,  ராசிபுரம் வட்டாட்சியருக்கு பூங்கொத்து  கொடுத்து கவனத்தை ஈர்க்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பூங்கொத் துடன் பொதுமக்கள் வந்த நிலையில், ராசிபு ரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாத தால் துணை வட்டாட்சியரிடம் மனுவுக்கு பதி லாக ‘பொக்கே’ கொடுத்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்

மே.பாளையம், பிப்.17- மேட்டுப்பாளையம் வேடர் காலனி பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா  கேட்டு தீப்பந்தம் ஏந்தி இரண்டாம் நாளாக தொடர்ந்து மக்கள் போராட் டம் நடத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிக்கதாசம்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட வேடர் காலனி என்னும் பகுதியில் 100 -க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக தாங்கள் குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா கேட்டு கோரிக்கை விடுத்து வந்த  நிலையில், அங்கு வசிக்கும் 26 பேருக்கு  மட்டுமே இலவச பட்டா வழங்கப்பட் டுள்ளது. இந்நிலையில், தங்கள் பகுதியில்  வசிக்கும் அனைவருக்கும் பாரபட்ச மின்றி  வீட்டுமனை பட்டா வழங்க வேண் டும் என்பதை வலியுறுத்தி வெள்ளி யன்று (16ஆம் தேதி) சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் தீப்பந் தம் ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன்,  காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததை அடுத்து அப்ப குதி மக்கள் நள்ளிரவிலும் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான சனியன்றும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோவை மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் கோவிந்தன் போராடி வரும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அதில், இலவச வீட்டு மனை  பட்டா வழங்குவதாக அவர் உறுதிய ளித்ததை அடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.