திருப்பூர், மே 12- தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிக ளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறி வித்துள்ளதற்கு ஆட்சேபனை தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் மனுக் கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாந கராட்சி அலுவலகம், நான்கு மண்டல அலுவ லகங்களிலும், வெள்ளகோவில், தாராபு ரம், பல்லடம், உடுமலை, திருமுருகன் பூண்டி உள்ளிட்ட நகராட்சி அலுவலகங்களி லும், அவிநாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர், தளி, முத்தூர் உள்ளிட்ட பேரூராட்சி அலுவ லகங்களிலும், பொது மக்களுடன் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் சொத்து வரி உயர் வுக்கு எதிராக வியாழனன்று ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி. ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.உண்ணிகிருஷ்ணன், ஜி.சாவித்திரி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், நகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், கே. பொம்முதுரை, பா.ஞானசேகரன், செந்தில் குமார் உள்பட கட்சி அணியினர், பொது மக் கள் திரளானோர் கலந்து கொண்டனர். இவர் கள் ஒன்றிய அரசின் நிபந்தனையை ஏற்று மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளில் அர சாணை மூலம் சொத்து வரியை உயர்த்த வதற்கு ஆட்சேபனை தெரிவித்து திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் வேலம்பாளையம் முதல் மண் டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்க ராஜ், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக் கள் 300க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மண்டல அலுவலக கண்காணிப்பாள ரிடம் சொத்து வரி உயர்வு ஆட்சேபனை மனு அளித்தனர்.
திருப்பூர் நஞ்சப்பா நகரில் உள்ள இரண் டாவது மண்டல அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தலைமையில் மண்டல கண்காணிப்பாளர் சத்தியவாணியிடம் சொத்து வரி உயர்வு ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, ஆ.சிகாமணி, முன்னாள் ஒன்றி யச் செயலாளர் கே.பழனிசாமி, இடைக்குழு உறுப்பினர்கள் மனோகரன், பாண்டியன், இளங்கோ, பானுமதி மற்றும் கிளைச் செய லாளர்கள் பங்கேற்றனர். நல்லூரில் உள்ள மூன்றாவது மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கத் தில் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, இடைக்குழு உறுப்பினர்கள் சி. சுப்பிரமணி, குணசேகரன் உள்பட கிளைச் செயலாளர்கள், கட்சி அணியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஆண் டிபாளையத்தில் நான்காவது மண்டல அலு வலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மனு கொடுக்கும் இயக்கத்தில் இடுவாய் ஊராட் சிமன்றத் தலைவரும், கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினருமான கே.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட்சுமி, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் ஈ.அங்குலட்சுமி, ரவிசந்திரன், ஜானகி, கருப்புசாசமி, செல் வகுமார் உள்பட பொது மக்கள் பங்கேற்று சொத்து வரி உயர்வுக்கு எதிராக ஆட்சபனை மனு அளித்தனர்.
ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத் தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக மனு கொடுக்கும் இயக் கத்துக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர், 7ஆவது வார்டு கவுன்சிலர் கு.சரஸ்வதி தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி, கை. குழந்தைசாமி ஆகியோர் சொத்து வரி உயர்வு பிரச்சனை குறித்து உரையாற்றி னர். கட்சி கிளைச் செயலாளர்கள் கே.பெரிய சாமி, எஸ்.மாரிமுத்து உள்பட திரளானோர் கலந்து கொண்டு பேரூராட்சி அலுவலக தலைமை எழுத்தரிடம் மனு அளித்தனர். வெள்ளகோவில் நகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி யின் காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், லோகேஷ் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்தில் ஆட்சேபனை மனு அளித்தனர். காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே. திருவேங்கடசாமி தலைமையில் கட்சி அணி யினர், பொது மக்கள் சொத்து வரி உயர் வுக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்த னர். முத்தூர் பேரூராட்சியில் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் தங்கவேல் தலை மையில் கட்சியினர் பேரூராட்சி அலுவலரி டம் சொத்து வரி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர்.
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம் தலை மையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு அளிக்கப்பட் டது.
அவிநாசி
திருமுருகன்பூண்டி நகராட்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நகர மன்ற ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர மன்ற கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், தேவ ராஜன், பார்வதி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி, ஒன் றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரம் தாலூகா செயலாளர் என்.கனக ராஜ் தலைமையில் பொதுமக்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி நகராட்சி மேலாளரிடம் மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும் இயக்கங்களில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.