districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

கோவை, பிப்.20- கோவையில் நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்வு  பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித் தார்.  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால்  2022 ஆம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பத விக்கான தேர்வில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் வெற்றி பெற்று காவல் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தேர்வான 5 நபர்களுக்கும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், திங்களன்று   கோவை சரக காவல் அலுவலகத்தில் வைத்து பணி நிய மன ஆணையை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார். இந் நிகழ்வில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற னர்.

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

நாமக்கல், பிப்.20- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங் கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள் ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்தி ரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப் படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்கு களை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங் கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயி ரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500  வரை உயர்வடைந்து, ரூ.11 ஆயிரத்து 50-க்கு விற்பனையா கிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500க்கு விற்பனை யானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,500 வரை உயர்வ டைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கு வரத்து குறைந்துள்ளதால், மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பலி

தாராபுரம், பிப்.20- தாராபுரம் அருகே அரசு பேருந்துகள் இரண்டும் மோதிய விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரிலிருந்து போடி செல்வதற்காக தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் சாலக்கடை பகுதியில் நள்ளிர வில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பால் கண்ணன் ஓட்டுநராக இருந்துள்ளார். முருகன் நடத்துனராக பணி யில் இருந்துள்ளார். அப்போது, திடீரென பேருந்தில் முன் சக்கரத்தில் பழுது ஏற்பட்ட தால் ஓரத்தில் நிறுத்தியுள்ளனர். இதனைய டுத்து, இருவரும் பேருந்தை சரி செய்வதற் காக  கீழே இறங்கி. ஆர்சிசிஎல் தனியார் பெட் ரோல் வாகனத்திற்கு தகவல் கொடுத்து காத் திருந்துள்ளனர். பின்னர், உதவிக்காக தனி யார் வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பேருந்தின் பின்பகுதியில் பாதுகாப்பிற்காக டேஞ்சர் விளக்கை எரிய விட்டு தடுப்பு அமைத்து மற்ற வாகனங்கள் செல்வதற்கு  இடையூர் இல்லாமல் நின்று கொண்டிருந்த னர். அப்போது பழுதான அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் பேருந்து முன் பகுதியில் அமர்ந்து கொண்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந் தது. இந்த பேருந்தை. கோபியைச் சேர்ந்த ரவிக் குமார் மற்றும் திருமூர்த்தி, ஓட்டுநர் மற்றும் நடத்துநராக பணியாற்றி வந்தனர். அப் போது சாலக்கடை பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது,  எதிர்பாராத விதமாக பயங்கரமாக சாலையில் நின்று கொண்டி ருந்த ஆர்சிசிஎல் பெட்ரோல் ரெக்கவரி வண்டி யின் மீது தாறுமாறாக மோதியது. பாதுகாப் பிற்காக நின்று கொண்டிருந்த பெட்ரோல் வாகனமானது, பழுது பார்த்துக் கொண்டி ருந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதியில் பேருந்தின் சக்க ரத்தை கழட்டி கொண்டு இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆன பால்கண்ணன், முருகன் மீது மோதியதில் சம்பவ இடத்தி லேயே ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேருந்தில் பயணம் செய்ய பயணிகள் யாரும் பேருந்துக்குள் இல்லாத தால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்ட்டது.  இரண்டு அரசு பேருந்து, ஒரு தனியார் ரெக வரி வாகனம் ஆகிய மூன்றும் மோதிக் கொண்ட விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். விபத்தில் பலியான பால் கண்ணன் மற்றும் முருகன் ஆகியோர் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர்.

மனிதகுலத்திற்கு பயனளிக்கும் நவீன மாற்றங்கள்

கோவை, பிப்.20- மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் வருவது மனித குலத்திற்கு பயனளிக்க கூடிய தாக இருக்கிறது என தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உரையாற்றினார். மருத்துவத்துறையில், குறிப்பாக அறுவை  சிகிச்சைகளில் நவீன ரோபோட்டிக் சிகிச்சை முறை தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து வருகிறது. இந்நிலையில், மூட்டு மாற்று சிகிச்சை முறையில் ரோபோட்டிக் சிஸ்டத்தை கோவை ரெக்ஸ் தனியார் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமி ழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு புதிய மூட்டு மாற்று ரோபோட்டிக் சிஸ்டத்தை  அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.  அப்போது டிஜிபி சைலேந்திரபாபு பேசு கையில், மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ நோயற்ற ஆரோக்கிய வாழ்வு அவசியம்.  அதற்கு மருத்துவர்களே மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றனர். மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் வருவது மனித குலத்திற்கு பயனளிக்க கூடியதாக இருக்கிறது. தற்போது நவீன மருத்துவ உபக ரணங்கள் மனிதனின் உடல் செயல்பாடுகளை பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது, என்றார்.  இந்நிகழ்ச்சியில், கௌரவ அழைப்பாளர் களாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவர் மருத்து வர் சிங்காரவேலு, செயலாளர் மருத்துவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்தடை

ஈரோடு, பிப்.20- பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் செவ்வாயன்று (இன்று) பரா மரிப்புப்பணி நடைபெற உள்ளது. எனவே, பெருந் துறை கோட்டத்தைச் சேர்ந்த  சிப்காட் வளாகம் தெற்கு  பகுதி, கம்புளியம்பட்டி, வரப் பாளையம், காசிபில்லாம் பாளையம் ஆகிய பகுதிக ளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள் ளார்.

தரம் இல்லாத விதை உரம் விற்பனையில் ஈடுபட்டால் சிறை தண்டனை

திருப்பூர், பிப்.20- உடுமலை வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் மற் றும் வேளாண் பொருட்கள் விற்பனையா ளர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில்,  போலியான தரம் இல்லாத உரம் மற்றும்  விதைகளை விற்பனை செய்யும் கடைகளின்  உரிமம் ரத்து செய்து. அதன் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று வேளாண்மை இணை இயக்குநர் மாரியப்பன் தெரிவித்தார். கடந்த 17 ஆம் தேதி உடுமலை கோட்டாட் சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உடுமலை மற் றும் மடத்துக்குளம் பகுதிகளில் போலியான தரம் இல்லாத விதைகள், உரம் மற்றும் மருந் துகள் விற்பனை செய்யப்படுவதாக தமிழ் நாடு விவசாய சங்கத்தின் சார்பில் புகார் தெரி விக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு  விவ சாய சங்க நிர்வாகிகள், இங்கு 60 சதவீதம்  விவசாய தொழிலை நம்பி ஆயிரக்கணக்கா னவர்கள் இருக்கும் நிலையில் போலியான உரம், மருந்துகள் மற்றும் விதைகளை விற் பனை செய்வதால் விவசாயிகள் மட்டும் நஷ் டம் அடைவது இல்லாமல்  மண்ணும் மலட்டுத்  தன்மையாக மாறுகிறது. இவற்றை தடுக்க  வேண்டிய அதிகாரிகளின் நடவடிக்கை எங்க ளுக்கு மேலும் பயத்தை அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர்  பகுதியில்  தரம் இல்லாத உரம் தயாரிக்கப்படு வதை அதிகாரிகளிடம் விவசாய சங்கத்தி னர் நேரில் தெரிவித்தும் இன்று வரை நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எந்த அதிகாரி யும் காலநிலைக்கு ஏற்ற விவசாயம் செய்ய வேண்டும் என்றும், விளை நிலங்களுக்கு நேர டியாக சென்று பயிர்களுக்கு என்ன உரம், மருந்துகள் பயன்படுத்த வேண்டும் என்று  சொல்வதும் இல்லை. இதனால் விவசாயி கள் கடைகளுக்கு சென்று அவர்கள் தரும் உரம் மற்றும் மருந்துகளை பயன்படுத்து கிறார்கள். மேலும் அந்த கடைகளில் வெளிப் படையான விலைப் பட்டியல் இருப்பது  இல்லை, வாங்கும் பொருட்களுக்கு முறை யான ரசீதும் தருவது இல்லை. இதனால் கடைகளில் வாங்கிய மருந்துகளால் ஏற்படும்  பாதிப்புகளை நிரூபிக்க முடிவது இல்லை என்று கூறினார்கள். இக்கூட்டத்தில் பேசிய தோட்டக்கலைத் துறையின் வேளாண்மை இணை இயக்கு நர் விதை ஆய்வாளர் சுந்தர வடிவேல் கூறிய தாவது,  

தற்பொழுது விதை, உரம் மற்றும் மருந்துகளில் தேவை அதிகமானதால் வியா பாரிகளும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவ னங்களிடம் பொருட்களை வாங்கி விற்பனை  செய்ய வேண்டும். ஆனால், அதிக லாபம் கிடைக்கும் என்று சிலர் அங்கீகாரம் இல்லாத  தனியார் நிறுவனங்களின் மருந்துகளை வாங்கி விற்பனை செய்வது குற்றமாகும். இந்த கடைகளின் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார். நிறைவாக பேசிய வேளாண்துறை இணை இயக்குநர் மாரியப்பன், விவசாயி களுக்கு வேளாண்துறை அதிகாரிகள் பரிந் துரை இல்லாமல் உரம் மற்றும் மருந்துகள் தரக்கூடாது. காலாவதியான விதை, உரம்  மற்றும் மருந்துகளை விற்பனை செய்யக்கூ டாது. மேலும் கடைகளில் உள்ள அனைத்து  பொருட்களின் இருப்பு, அதன் விலை பட்டி யல் வைக்க வேண்டும். விவசாயிகள் வாங் கும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். மேலும் அரசால் தடை செய்யப் பட்ட மற்றும் காலாவதியான பொருட்களை கடையில் வைத்து இருப்பது குற்றம். இது  போன்ற குற்றங்கள் செய்யும் கடைகளின் உரி மம் ரத்து செய்வது மட்டும் இல்லாமல் சிறை  தண்டனைக் கிடைக்கவும் சட்டப்படியான நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.  இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை  இயக்குநர் மாரியப்பன், வேளாண்மைத் துறை தோட்டக்கலைத்துறை இணை இயக் குநர் சுரேஷ் ராஜா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மற்றும் விதை சான்று துறையின் சுந்தர வடிவேல், வேளாண்மை உதவி இயக்குநர் தேவி  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.ஆர். மதுசூத ணன், பாலதண்டபானி, பரமசிவம், ஸ்ரீதர்  மற்றும் வேளாண் பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

காது கேளாதோர் போட்டி: திருப்பூர் பள்ளி சாதனை

திருப்பூர், பிப்.20- மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேசிய அளவில் காது  கேளாதோருக்கான தடகள போட்டி கடந்த 15-ந் தேதி தொடங்கி 19ந் தேதி வரை 5 நாட்கள் நடந்தது. இந்த போட்டி யில் திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள காது கேளா தோர் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் லோகநாதன்,  குருபரன், தர்சனா, ஜீவா ஆகிய 3 பேர் பங்கேற்றனர். இதில்  400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குருபரன் 2 ஆவது பரிசை யும், 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பெண்கள் பிரிவில் தர்சனா  3 ஆவது பரிசும், 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் ஜீவா 3 ஆவது பரிசும் பெற்று சாதனை படைத்த னர். தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள்  திருப்பூருக்கு திரும் பினர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற் றும் பள்ளி சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட் டது. தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதன்  மூலம் குருபரன், தர்சனா, ஜீவா ஆகிய 3 பேரும் சர்வதேச அள விலான போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர். இந்த  போட்டி நடைபெறும் இடம், தேதி விரைவில் தெரிவிக்கப் படும் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு  ரூ.5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி

திருப்பூர், பிப்.20- துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து ஆல்  இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் மூலம் ஐந்து  லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி  வைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியா வில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் வாழ்வாதா ரத்தை இழந்தும் உடமைகளை இழந்தும் தவித்து வருகின்ற னர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகை யில் ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் திருப் பூர் மாவட்டத்தின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான  பின்னலாடை பொருட்கள் அனுப்பும் நிகழ்வு திருப்பூர் பழைய  பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆல் இந்தியா கேரளா  முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை சாபிக் அலி சிகாபுத்தங்கள் துவக்கி  வைத்தார். இந்த நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக இங்கி ருந்து எடுத்துச் செல்லப்பட்டு டெல்லியில் உள்ள தூதரகத் தில் ஒப்படைக்கப்படும் என்றும், இது முதல் கட்டமான நிகழ்வு  என்றும், தொடர்ந்து துருக்கி, சிரியா மக்கள் இயல்பு நிலைக்கு  திரும்பும் வரை உதவி பொருட்களை அனுப்பப்படும் என்றும்  இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா கூறினார்.

ரூ.1 லட்சத்தி 40 ஆயிரத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, பிப்.20- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடைபெற்ற  நிலக்கடலை ஏலத்தில் ரூ.1 லட்சத்தி 40 ஆயிரத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம்  நடைபெற்ற ஏலத்தில், 36 மூட்டைகள் வந்திருந்தன. குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை  ரூ.8,000 முதல் ரூ.8,300  வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,500 முதல்  ரூ.7,800 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,300  முதல் ரூ.6,600 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.1 லட்சத்தி 40 ஆயிரத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 3 வியா பாரிகள், 11 விவசாயிகள் பங்கேற்றனர்.

மின்தடை

ஈரோடு, பிப்.20- சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் செவ்வாயன்று (இன்று) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்குட்பட்ட ஊத்துக் குளி சாலை, மேலப்பாளை யம், பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டி பாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக் கம்பாளையம், வாய்ப்பாடி புதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முரு கம்பாளையம், உத்திராண்டி பாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநி யோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.