பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கல்
தருமபுரி, நவ.7- தருமபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியின்போது உயிரிழந்த இருவரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டன. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சுப்பிர மணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியின் போது உயிரிழந்த இருவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி தரும புரி மாவட்ட ஆட்சியா் அலுவலக முகாம் அலுவல கத்தில் புதன்னறு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கி னார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, சர்க் கரை ஆலை செயலாட்சியர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மெமு ரயில் சேவை நீட்டிப்பு
சேலம், நவ.7- கோவை - திண்டுக்கல் இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவ.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த அக்.30 ஆம் தேதி முதல் நவ.6 ஆம் தேதி வரை கோவை - திண்டுக் கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட்டது. கோவையிலிருந்து பழனி, திண்டுக் கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்க ளுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவ.7 முதல் 30 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (எண்: 06106) பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் நவ.7 முதல் 30 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (எண்: 06107) மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி உள் ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ரயில் சேவையை நிரத்தரப்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கு செல்லாத ஆசிரியர் இடைநீக்கம்
பள்ளிக்கு செல்லாத ஆசிரியர் இடைநீக்கம் தருமபுரி, நவ.7- சரியாக பள்ளிக்கு செல்லாத அரசுப்பள்ளி ஆசிரி யர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ராமியம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த ஆக.2 ஆம் தேதியன்று நடந்த கல்வி மேலண்மைக் குழு கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்களிடம் கருத்து கேட்டறிந்ததனர். அப் போது அப்பள்ளியின் உதவி ஆசிரியர் பாலாஜி சரியாக பள்ளிக்கு வருவதில்லை என தெரியவந்தது. எனவே, மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் புகார் கடிதம் அளித்தனர். இதன டிப்படையில் தற்போது அரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னமாது, பள்ளிக்கு செல்லாத உதவி ஆசிரியர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்துள் ளார்.
ரயிலில் விதிகளை மீறி பயணித்த 33,484 நபர்களுக்கு அபராதம் விதிப்பு
சேலம், நவ.7- சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் விதிகளை மீறி பயணித்த 33,484 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட சேலம் கோட்டத்தில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா தலைமையிலான குழுவினர், விதிகளை மீறி பயணிக் கும் பயணிகளைக் கண்டறிய தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் பயணச் சீட்டு இன்றி பயணித்த 16,062 பேருக்கும், முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியி லும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டு வைத் துக் கொண்டு ஏசி பெட்டிகளிலும் என முறைகேடாக பய ணித்த 17,269 பேருக்கும், விதிகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்துச் சென்ற 153 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட் டது. மொத்தமாக ரூ.2.09 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
கல்லாறு பகுதியில் சோதனைச்சாவடி
மேட்டுப்பாளையம், நவ. 7- கல்லாறு பகுதியில் புதிதாக காவல்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை, நீலகிரி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் நிஷா புதனன்று திறந்து வைத் தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்றுலாத் தலமான நீலகிரிக்கு சென்று திரும்புகின்றன. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இவ்வழியே செல்லும் வாக னங்களை கண்காணிக்கவும், சோதனை செய் யவும், இ - பாஸ் சோதனை செய்வதற்காக, நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப் பட்டு இருந்தது. இந்நிலையில், விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் அதிக வாகனங் கள் வருகிறது. மேலும், மழை காலங்களில் சோதனைச்சாவடியில் உள்ள காவலர்கள் வாகன தணிக்கைக்கு பெரும் சிரமம் அடை கின்றனர். இதனை கருத்தில் கொண்டு புதி தாக சோதனைச்சாவடி அமைக்க நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் முடிவு எடுக் கப்பட்டது. இதன்படி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில் குமார் உத்தரவின் பேரில், நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள கல்லாறு அருகே புதிதாக இரும்பு கண்டெய்னர் அறை அமைக்கப்பட்டு அதில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டது. மேலும், மழை, வெயில் உள்ளிட்ட காலங்களில் பாது காப்பாக பணி செய்யும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்ன தாக, இந்த புதிய காவல்துறை சோதனை சாவ டியை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா புதனன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், மேட்டுப்பாளை யம் காவல்துறை ஆய்வாளர் சின்னகாமன், குன்னூர் காவல் ஆய்வாளர் சதீஸ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
மேட்டூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் கொள்ளை
சேலம், நவ.7- மேட்டூர் அருகே அனல் மின் நிலைய குடியிருப்புகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலைய குடியி ருப்பு தொட்டிபட்டியில் உள்ளது. இந்நிலையில், செவ்வா யன்று இரவு இந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அடை யாளம் தெரியாத நபர்கள் கொண்ட கும்பல், 12 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. நான்கு வீடுகளில் தனி நபர்கள் மட்டும் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் விலை உயர்ந்த பொருட்களோ, பணமோ இல்லை. ஐந்து வீடுகளில் யாரும் வசிக்கவில்லை. மூன்று வீடுகளில் மட்டுமே கொள்ளை நடந்துள்ளது. மேட் டூர் அனல் மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணி புரியும் மோகனா என்பவர் வீட்டில் ஆறரை பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நோபீஸ் வரன் என்பவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.ஒரு லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 11 பவுன் நகை களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகா ரின்பேரில், மேட்டூர் காவல் துணை கண்கணிப்பாளர் ஆரோக் கியராஜ், கருமலைக்கூடல் காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்
கோவை, நவ.7- சூலூர் வாரப்பட்டி பகுதியில் ராணுவ தொழிற் பூங்கா அமைக்கும் அமைய உள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நிறுத்தி அப்பகுதி விவசாயிகள் திடீர் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அருகே வாரப்பட்டி பகுதியில் சுமார் 370 ஏக்கர் நிலப்பரப்பு ராணுவ தளவாடங்கள் தயாரிக்க கூடிய தொழில் பூங்கா அமைய உள்ளது. தொழில் பூங்கா அமைய உள்ள இடத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி.ராஜா பார்வையிட்டு சென்ற நிலையில் தொழில் பூங்கா வதற்கான சாலை பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணுவ தொழில் பூங்கா அமைய உள்ள இடத்திற்கு அருகில் உள்ள விவசாயிகள் திடீரென ஒன்று கூடி சாலை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என போராட்டம் நடத்தினர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ராணுவ தளவா டங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவை யொட்டி தங்க ளது விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. அரசு பொது பாதையை ஆக்கிரமித்து பணிகள் நடைபெற்று வருவதால், வருங்காலங்களில் தாங்கள் அந்த பாதையை பயன்படுத்துவ தில் சிக்கல் ஏற்படுத்தும். தங்களுக்கான வழித்தடத்தை உரு வாக்கி கொடுத்து விட்டு பணிகளை தொடர வேண்டும். என்றனர். தொழில் பூங்கா பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி ஒதுக்கீட்டில் தகராறு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
உதகை, நவ.7- பணி ஒதுக்கீட்டில் தகராறு ஏற்பட்டதால் மத்திய கூட்டு றவு வங்கி ஊழியர்கள் புதனன்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதகை சேரிங்கி ராசில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாவில் 22 கிளைகள் உள்ளன. இதில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வாடிக்கை யாளர்களாக உள்ளனர். இந்நிலையில், உதகையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கிளை பொது மேலாளர் வெற்றி வேலன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். சமீபகாலமாக இந்த வங்கியில் மற்ற துறை அலு வலர்களுக்கு பொது மேலாளர் பணி ஒதுக்குவது சம்பந்த மாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. புதிய பொது மேலாள ரின் செயல்பாட்டுக்கு மற்ற மேலாளர்கள் மற்றும் ஊழியர் கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு சம்பந்த மாக புதனன்று பொது மேலாளருக்கும் மற்ற துறை மேலா ளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டாகும் சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் திடீரென்று பணியை புறக் கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை ஊழியர்கள் பணியில் ஈடுபடாததால், அப்போது வங்கி சேவைகளுக்காக வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் தயாளன் உத்தரவின் பேரில், மேலாண்மை இயக்கு நர் அய்யனார், ஊழியர்கள் மற்றும் பொது மேலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முடிவில் பணி ஒதுக்கீட்டில் பழைய முறையை பின்பற்றப்படும் என்று கூட்டு றவு வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சாதிப் பெயரை சொல்லி மனைவியை இழிவாக பேசிய கணவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
தருமபுரி, நவ.7- மனைவியை சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசி துன்புறுத்திய கணவர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஆண்டியூர் அடுத்த கீழ் செங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன் (27). இவர் பாலக்கோடு சப் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர், திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி வட்டம், இடும்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை (வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்) காதலித்து வந்துள்ளனர். இவர்கள், கடந்தாண்டு டிச.8 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டு, தருமபுரியில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இரண்டு மாத கர்ப்பிணியான அப்பெண்ணுக்கும், இலங்கேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இலங்கேஸ்வரன் தாக்கியதில், கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் இலங்கேஸ்வரன், மனைவியை சமாதானப்படுத்தி, பாலக்கோட்டிற்கு வரச்சொல்லி அரசு மருத்துவமனை எதிரில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மனைவிக்கு அதிகமாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு சம்மதிக்காததால் இலங்கேஸ்வரன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு பொதுமக்கள் பார்க்கும் வகையில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியதாகக்கூறி அப்பெண் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் இலங்கேஸ்வரனை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.