கோவை, மார்ச் 24- வேளாண் ஒழுங்குமுறை விற்ப னைக்கூட கண்காணிப்பாளர் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி பாக்கு வியா பாரிகள் கோவை வேளாண் விற்பனைக் குழு அலுவலகத்தில் வெள்ளியன்று முற் றுகையிட்டனர். கோவை, காரமடை வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பா ளராக பணியாற்றி வந்தவர் சந்திரமோ கன். இவர் மார்ச் 1 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், சேவூர் வேளாண்மை ஒழுங் குமுறை விற்பனை கூடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந் திரமோகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரமடை, மேட்டுப்பாளை யத்தைச் சேர்ந்த பாக்கு வியாபாரிகள் கோவை வேளாண் விற்பனைக்குழு அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பாக்கு வியாபாரிகள் கூறுகையில், வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பொருட் களை இருப்பு வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும். இருப்பு வைக்கப்படும் பொருட் களுக்கு ஒரு சதவீதம் செஸ் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், காரமடை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குவதற் கும், செஸ் வரி செலுத்துவற்கும் கண்கா ணிப்பாளர் லஞ்சம் பெற்று வருகிறார். ஒரு உரிமத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று வருகி றார். லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உரி மம் வழங்குகிறார். இதனால் பாக்கு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். தவிர, செஸ் வரிக்கான பணத்தை பெற் றுக்கொண்டு ரசீதும் தருவதில்லை. இத னால் வேளாண் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தின் வருவாய் பாதிக்கப்படு கிறது. எனவே, உரிமம் வழங்குவதற்கும், செஸ் வரிக்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் கேட்கும் விற்பனைக் கூட கண்காணிப் பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர்.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனை வரும் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக வேளாண் விற்ப னைக்குழு முதுநிலை மேலாளர் ரா. சாவித்ரி கூறுகையில், காரமடை விற்ப னைக்கூட கண்காணிப்பாளராக பணியாற் றிய சந்திரமோகன் மீது முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் படி, மார்ச் 23 ஆம் தேதி கண்காணிப்பா ளர் சந்திரமோகனிடம் தனியாக விசா ரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், செஸ் வரி வசூலித்தது உள்ளிட்ட அனைத் திற்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித் துள்ளார். தொடர்ந்து வியாபாரிகள், விற் பனைக்கூட கண்காணிப்பாளர் இருவரி டம் விசாரணை மேற்கொள்வதற்காக வெள்ளியன்று விற்பனைக்குழு அலுவல கம் வரவழைக்கப்பட்டனர். இதில் வியா பாரிகள் 300க்கும் மேல் திரண்டு விசா ரணை மேற்கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தினர். தொடர்ந்து இருதரப்பி லும் உரிய விசாரணை மேற்கொண்டு இயக்குநர் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என்றார்.