குரூப் -4 இலவச மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு
தருமபுரி, ஜூலை 12- தருமபுரி அவ்வையார் பெண்கள் அரசு பள்ளியில் ஜூலை 17 ஆம் தேதி குரூப்-4 இலவச மாதிரி தேர்வு நடை பெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத் தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் நடத்தும் குரூப்-4, 2022 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்பட உள் ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://surl.li/cjiqr என்ற Google படிவத்தில் விண் ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயி லாக தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4, 2022 போட்டித்தேர்வின் இல வச மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி முதியவர் பலி
பென்னாகரம், ஜூலை 12- பென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மாடு மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் பரிதாபமாக இறந்தார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள போடூர் பகுதி சேர்ந்தவர் மாரியப்பன் வயது 60 மாற்றுத்திறனா ளியான இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சொந்த வேலை காரணமாக மாரியப்பன் ஏரி யூர் சென்றார். வேலையை முடித்துவிட்டு தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மூலம் வீடு திரும்பி உள்ளார். அப் போது கூத்தப்பாடி குளத்தங்கரை அருகே வந்தபோது சாலை யில் எதிரே வந்த மாடு மோட்டார் சைக்கிள் மீது மோதி யது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாற்று திறனாளி இறந்தார். இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி முதி யவர் மாடு மோதி விபத்தில் இறந்த சம்பவம்அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவிடம் விசாரணை
கோவை, ஜூலை 12- கொடநாடு விவகாரம் தொடர்பாக அதிமுக முன் னாள் எம்எல்ஏ வி.சி.ஆறு குட்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கோட நாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. செவ்வா யன்று விசாரணைக்கு கவுண் டம்பாளையம் தொகுதி அதி முக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி விசாரணைக்கு அஜராக சம்மன் அனுப்பப் பட்டு இருந்தது. இதனைய டுத்து விசாரணைக்கு ஆஜரா னார். மூன்றாவது முறையாக மீண்டும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று ஆறுகுட்டியிடம் விசா ரணை நடத்தப்பட்டு இருப் பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
திருப்பூர், ஜூலை 12 - மத்திய அரசின் டிடியு - ஜிகேஓய் திட்டத்தின் கீழ் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. தொழில்நெறி மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு வாரம் அனுசரித்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஜூலை 11 ம் தேதி முதல் ஜுலை 15 தேதி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தால் நடத்தப்படவுள்ளன. அதன்படி, மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் போட்டித் தேர்வுகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு, தனியார் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்து ரைத்தார். உதவி திட்ட அலுவலர் முத்துக்குமார், மகளிர் திட்ட அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். கனரா வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர்.
அண்ணன் அடித்துக் கொலை தம்பி தலைமறைவு
திருப்பூர், ஜூலை 12 - திருப்பூரில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த அண்ணனை அடித்துக் கொலை செய்து விட்டு தம்பி தலைம றைவானார். திருப்பூர் மாஸ்கோ நகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த வர் சாமிநாதன். இவரது மகன்கள் நாகராஜ் (42), கார்த்திக் (30). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் பனி யன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நாகராஜ் பெயரில் இரண்டு சென்ட் இடம் மாஸ்கோ நகரில் உள்ளது. அந்த இடத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி தம்பி கார்த்திக் கேட்டுள்ளார். ஆனால் நாக ராஜ் எழுதிக் கொடுக்கவில்லை என தெரிகிறது. திங்களன்று இரவு வேலை முடிந்து வந்த இருவரும் வீட்டில் மது அருந்தி உள்ளனர். அப்போது தம்பி கார்த்திக் இடத்தை எழுதித் தரும்படி கேட்டதைத் தொடர்ந்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் முன்புறம் கிடந்த கட்டையால் அண்ணன் நாகராஜை சரமாரியாக தாக்கியுள் ளார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்தி லேயே பலியானார். நாகராஜ் உயிரிழந்ததை அடுத்து கார்த் திக் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வடக்கு போலீசார் செவ்வாயன்று காலை நாகராஜ் சடலத் தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். தலைமறைவான தம்பி கார்த்திக்கை தேடி வருகின்ற னர்.
ஜூலை 14இல் திருப்பூர் மாநகரில் மனை வரன்முறை சிறப்பு முகாம்
திருப்பூர், ஜூலை 12– திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களி லும் அனுமதி இல்லாத மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக வரும் 14ஆம் தேதி வியாழனன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 1, 9 முதல் 15 மற்றும் 21 முதல் 27 வரையுள்ள வார்டுகளுக்கு வேலம்பாளையம் முதல் மண்டல அலுவலகத்தில் உதவிப் பொறியாளர் ஹரி (9894747571), இளம் பொறியாளர் கோவிந்தபிரபாகர் (86438 51051) ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டும். 2 முதல் 8 வார்டுகள், 16 முதல் 20 வார்டு கள், 30 முதல் 32 வரையுள்ள வார்டுகளுக்கு நஞ்சப்பா நகரில் உள்ள இரண்டாவது மண்டல அலுவலகத்தில் உதவிப் பொறியாளர் ஹரி (9894747571) பங்கேற்பார். 33 முதல் 35, 44 முதல் 31, 56, 58 முதல் 60 வரை உள்ள வார்டுகளுக்கு நல்லூர் மூன்றாவது மண்டல அலுவலகத்தில் உதவிப் பொறியா ளர் ஆறுமுகம் (98422 72494) பங்கேற்பார். 28, 29, 36 முதல் 43 வரை, 52 முதல் 55 வரை மற்றும் 57ஆவது வார்டு உள்ளடக்கிய நான்காவது மண்டலத்திற்கு திருப்பூர் மங்கலம் பாதை எஸ். ஆர்.நகர் தெற்கு ரத்தினவிநாயகர் கோவில் மண்டபத்தில் இளம்பொறியாளர் கோவிந்தபிரபாகர் (86438 51051) பங்கேற் பார். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பொது மக்கள் விண் ணப்பங்களை வழங்க வேண்டும். அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இம்முகாமில் மனை, மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு பத்திரம் நகல், 2016ஆம் ஆண் டுக்கு முந்தைய மூலப்பத்திரம் நகல், பட்டா, சிட்டா நகல், மனைப்பிரிவு வரைபடம் நகல், வில்லங்கச் சான்று நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் வந்து மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணை யர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளார்.
அதிமுக வசம் இருந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியை திமுக கைப்பற்றியது
அவிநாசி, ஜூலை 12- அவிநாசி ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வசம் இருந்து வந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியை தற்போது திமுக கைப்பற்றியது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றி யம் ராமநாதபுரம் உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஒன்றிய கவுன் சிலராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த லோகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இத னைத் தொடர்ந்து சில மாதம் அப் பதவி காலியாக இருந்து வந்தது. இதையடுத்து தமிழக முழுவதும் காலியாக இருக்கும் ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சீனிவாசன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த எடப் பாடி அணி சுரேஷ்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் லட்சும ணன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கன கராஜ் ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்ததைய டுத்து கனகராஜ் வேட்பு மனுவை திரும் பப்பெற்றார். இதையடுத்து அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உட்கட்சி பிரச்சனை காரணமாக இரட்டை இலை சின்னம் இல்லாமல் தென்னை மர சின்னத்தில் சுரேஷ்குமார் போட்டியிட்டார்.
இதில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் சீனி வாசனுக்கு ஆதரவாகச் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தார். அதிமுக அவிநாசி சட்ட மன்ற உறுப்பினர் தனபால் நோய்த் தொற்று காரணமாக வீட்டுத் தனிமை யில் இருந்ததால் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவில்லை என்று கூறப்ப டுகிறது. மேலும் இரட்டை இலை சின்னத் தில் போட்டியிடாமல் தென்னை மர சின்னத்தில் அதிமுக போட்டியிடுவ தால். இதை தனக்குச் சாதகமாக பயன்ப டுத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட லட்சுமணனுக்கு ஆதரவாகத் திருப்பூர் முன்னால் மேயர் விசாலாட்சி, முன் னால் அமைச்சர் உடுமலை சண்முக வேல் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக் கையில் மொத்தமாக 4283 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் திராவிட முன் னேற்ற கழக கூட்டணி சார்பில் போட்டி யிட்ட சீனிவாசன் 2165 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதி முக எடப்பாடி அணி சார்பில் போட்டி யிட்ட சுரேஷ்குமார் 1991 வாக்குகள் பெற்றுத் தோல்வியுற்றார். அடுத்தபடி யாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட லட்சுமணன் வெறும் 72 வாக்குகள் பெற்று வைப்புத் தொகை இழந்தார்.
24 பேருக்கு கொரோனா
திருப்பூர், ஜூலை 12 – திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டிருப்பதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே திங்களன்று 166 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். புதிதாக 24 பேருக்கு தொற்று பாதித்தி ருக்கும் நிலையில் இம்மா வட்டத்தில் சிகிச்சை பெற்று வருவோர் மொத்த எண் ணிக்கை 171 ஆக சற்று அதிக ரித்துள்ளது.
அவிநாசியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அவிநாசி, ஜூலை 12- தமிழ்நாடு மின்சார வாரி யம், அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவ லகத்தில் புதன்கிழமை ஜூலை 13 காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடைபெறு கிறது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற் பார்வை பொறியாளர் கலந்து கொண்டு மின் நுகர் வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கி றார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெ றுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற் பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித் துள்ளார்.
சோலையாறு அணை நிரம்பியது
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள வால் பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, வால்பாறை அருகே உள்ள 160 அடி கொண்ட சோலையார் அணை 163.49 அடியை எட்டியது. தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 6 ஆயிரத்து 916 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 5 ஆயிரத்து 423 கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வ ரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை பகுதி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கவியருவில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக ஆழியார் அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதனால், ஆழியார் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட ஆழியார் அணை தற் பொழுது 96 அடியை எட்டியுள்ளது.
பெண் மருத்துவரிடம் ரூ.19.5 லட்சம் மோசடி
கோவை, ஜூலை 12- திருமணம் செய்து கொள்வதாக கூறி கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம் ரூ.19.5 லட்சம் வாங்கி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பீளமேடு பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். மன நல மருத்துவரான இவர் வரன் தேடி வந்துள்ளார். யுசான் சியான் என தன்னை அறிமுகப்படுத் திக்கொண்டுதான் நெதர்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளாகவும், நான் இந்தியா வில் செட்டிலாகி இங்குள்ள பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரி மாறி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி ஒருவர் யுசான் சியான் எனது நண்பர், அவர் தனது தாயாருடன் தில்லி வந்துள்ளார். அவரது செல்போன் பழு தால் உங்களிடம் பேசமுடியவில்லை. அவர்கள் 1 லட்சம் யூரோப் டாலர் கொண்டு வந்துள்ளனர். அதனை மாற்றுவ தற்கும், அவர்கள் தங்கும் வசதி, விமான டிக்கெட், வரி உட்பட்டவற்றுக்கு ரூ.19 லட்சம் கட்ட வேண்டும். நீங்கள் பணம் செலுத்திய பின்னர் அவர்கள் உங்களை நேரில் சந்தித்து பணத்தை கொடுத்து விடுவார் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெண் மருத்துவரும் அந்த பணத்தை அவர் களது வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். இதன்பிறகு யுசான் சியான் எண்ணை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கோவை மாநகர குற்றப்புலனாய்வு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பண மோசடியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது
கோவை, ஜூலை 12- காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தி யால் குத்திய சம்பவம் கோவையில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் துறையினர் கைது செய்த னர். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகு தியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒரு வர், லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பைனான்ஸ் துறை பயிற்சி பணி யாளராக வேலை செய்து வருகிறார். அந்த பெண், சேலம் மாவட்டம், நெத்திமேடு பகுதி யைச் சேர்ந்த தினேஷ் (26) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிரா மில் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலை யில், தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை வந்து அந்த பெண்ணை சந்தித்து, தன் காதலை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் காதலிக்க மறுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து தன்னை காதலிக்க வேண்டும் என தினேஷ் வற்புறுத்தியதால், அவரது தொலை பேசி எண்ணை அந்த பெண் முடக்கியுள் ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் செவ்வாயன்று காலை அந்த பெண் பணி யாற்றும் நிறுவனத்திற்கு வந்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மிரட்டியுள் ளார். ஆனால், தொடர்ந்து பெண் மறுத்ததால் தினேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் முகம், தோள்பட்டை, தலை பகுதியில் வெட்டியுள்ளார். இதையடுத்து அங்கு பணியிலிருந்தவர்கள் தினேசை பிடித்து பந்தையசாலை காவல் துறையினரி டம் ஒப்படைத்தனர். இதையடுத்து தினே சின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.