காட்டெருமை கூட்டம் முகாம்
உதகை, அக். 4- கோத்தகிரி, கேத்ரீன் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமை கூட் டத்தால் விவசாயிகள் தேயிலை பறிக்க முடியாமல் அவதிய டைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் - உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். மேலும், விவசாய பயிர்களையும் சேதபடுத்தி வருகின்றன. இந்நிலையில், கோத்தகிரி அருகே கேத்ரீன் நீர் விழ்ச்சிக்கு செல்லும் சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெ ருமைகளின் கூட்டம் முகாமிட்டுள்ளது. காட்டெருமைகள் தேயிலை செடிகளை சேதபடுத்தி வருகின்றன. மேலும் காட்டெருமைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள் ளதால் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களிலிருந்து இறங்கி காட்டெருமை களை புகைபடம் எடுத்து வருகின்றனர். வனத்துறையினர் காட்டெருமை கூட்டத்தை வன பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார் மோதி பெண் படுகாயம்
கோவை, அக்.4- சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்தார். இதுகுறித்த கண் காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வடகோவை - சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். லீலாவதி வேலைக்காக பூ மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கென்னடி திரையரங்கு அருகே நடந்து சென்ற போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதி பின்னர் லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப் பட்டார் இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் உத்தம்குமார் என்பதும், அதிவேகமாக வந்ததாலேயே விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை, அக்.4- வீட்டின் முன்பு கோலமிட்டு கொண்டிருந்த பெண்ணை நோட்டமிட்டு 17 சவரன் நகையை பறித்து சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, ஒண்டிப்புதூர்- செந்தில் ஜனதா வீதியில் வசிப் பவர் கலைவாணி. வழக்கமாக இவர் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது வழக்கம். புதனன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்தார். அப்போது, அங்கிருந்த ஆட்டோவில் மறைந் திருந்து நீண்ட நேரம் காத்திருந்து, திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 17 சவரன் தங்க சங்கிலியை அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் பறித்து சென்றார். இது தொடர்பான கண் காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில், கலைவாணியின் கழுத்தில் இருந்த சங்கலியை பறித்துச் செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக கலைவாணி, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில், போலீசார் கண் காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாராம் தாக்கி தொழிலாளி பலி
கோவை, அக்.4- கோவையில், மின்சாரம் தாக்கி வடமாநில தொலாளி பலி யாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், சங்கரம்பூரை சேர்ந்தவர் சந்தன் மன்ஜி (26). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். தொண்டாமுத்தூர்- கொண்டையம்பாளையத்தில் தங்கி யிருந்து தனியார் பைப் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சந்தன் மன்ஜியை அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேலாளரின் வீட்டில் தகர ஷெட் அமைக்கும் பணிக்கு அழைத்து சென்றார். அங்கு வேலை பார்த்து கொண் டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சந்தன் மன்ஜி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சிய டைந்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதுமலை யானை சவாரிக்கு பதிவு செய்ய இணைதள அறிமுகம்
உதகை, அக்.4- முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகன மற்றும் யானை சவாரி பற்றிய தகவல்களை அறியவும் மற்றும் முன்பதிவு செய்யவும் புதிய அம்சங்களுடன் கூடிய இணையதள முகவரியை தமிழ்நாடு வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டிவிட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ளார். தமிழகம், கேரளம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதி யாக நீலகிரி மாவட்டம், முதுமலை வனப் பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி,மான், சிறுத்தை, கரடி, காட் டெருமை உள்ளிட்ட ஏராளமான விலங்கு கள் மற்றும் அரியவகை பறவை இனங் களின் வசிப்பிடமாக உள்ளது. இங்கு உள்ள வனவிலங்குகளை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரி கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ் விக்கும் வகையில் சிறு கட்டணங்கள் வசூலிக் கப்பட்டு வனத்துறை சார்பில் சுற்றுலா பயணி களை வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் சவாரி அழைத்து செல்வது வழக்கம். அதே போல் காலை மற்றும் மாலை நேரங்களில் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிப்பதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். மேலும், வாகன சவாரி மற்றும் யானை முகாம்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் கட்டணங்கள் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தர வேண் டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வாகன சவாரி மற்றும் யானைகள் முகாம் பற்றிய தகவல்களை அறியவும் மற்றும் முன்பதிவு செய்யவும் புதிய அம்சங்களுடன் கூடிய mudumalaitigerreserve.com #TNForest @tnforestdept #mudumalai என்ற இணையதள முகவரியை தமிழ்நாடு வனத்துறை செயலர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் இளைஞரிடம் எஸ்.பி.அலுவலகத்தில் விசாரணை
திருப்பூர், அக். 4 – திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் ஓலப்பாளையம் கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட தலித் இளை ஞரிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி புதனன்று விசாரணை மேற்கொண்டார். தாராபுரம் வட்டம் நந்தவனம்பாளையம் ஊராட்சி ஓலப்பா ளையம் கிராமம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவரான பிர புவை, உள்ளூர் சாதி ஆதிக்க பிரமுகர் பாலகிருஷ்ணன் தூண் டுதலில் கடந்த ஏப்ரல் மாதம் சிலர் தாக்குதல் நடத்தினர். பிரபு வுடன் அவரது அம்மா, அப்பா ஆகியோரையும் தரக்குறை வாக சாதியைச் சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். அத்துடன் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்த குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். திருப்பூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்ற பிரபு காவல் துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்து புகார் கூறியிருக்கிறார். எனினும் குண்டடம் காவல் நிலையத்தில் அவரது வாக்குமூலத்தில் மாற்றம் செய்து பிரபுவின் கையெழுத்தைப் போல் போலி கையெழுத்துப் போட்டுள்ளனர். மேலும் பிரபுவின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்குதல் நடத்தியவர்க ளுக்கு ஆதரவாக, அவர்களுடன் சமரசமாகப் போகும்படி பிர புவை காவல் துறையினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். எனவே பிரபு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் கொடுத் திருந்தார். தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மாவட்ட நிர்வாகத் துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பிரபுவிடம் புதன்கி ழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி விசாரணை மேற்கொண்டார். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் டிஎஸ்பி., குண்டடம் இன்ஸ்பெக்டர் ஆகி யோரிடம் நாளை விசாரணை நடத்திவிட்டு பிறகு அழைப்ப தாக ஏடிஎஸ்பி கூறியதாக பிரபு தெரிவித்தார்.
ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்பூர், அக். 4 - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் வடக்கு, கிழக்கு வட் டாரக் கிளைகளின் சார்பாக ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டி சென்னை யில் உண்ணாவிரதம் இருக் கும் ஆசிரியர்களுக்கு ஆதர வாக எண்ணும் எழுத்தும் பயிற்சி மையங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 15 வேலம்பாளை யம் நடுநிலைப்பள்ளிக்கு வெளியே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்திற்கு வடக்கு வட் டாரத் தலைவர் நவ்ஷாத் தலைமை தாங்கினார். வடக்கு வட்டாரச் செயலா ளர் வே.நாகராஜ் கணேஷ் குமார் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்ட முழக்கங்களை எழுப் பினார். கிழக்கு வட்டாரச் செயலாளர் குழந்தை அற்புத ராஜ் உட்பட ஆசிரியர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.
உடுமலையில் இன்று மின்தடை
உடுமலை, அக்.4- உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணி கள் நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: மடத்துக்குளம், கிருஷ் ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிப்புதூர், ரெட்டிபாளை யம், நீலம்பூர், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர், உடுமலைப்பேட்டை நகரம், பழனிபாதை, தங்கமாள் ஓடை, இராகல்பாவி, சுண் டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வென சுபட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநா யக்கனுர், சோமவாரம்பட்டி, பெதப்பம்பட்டி, ஏரிப்பாளை யம், புக்குளம், குறிச்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர்நகர், ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி மற்றும் குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதி களில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் அய்யப்ப ராஜன் தெரிவித்துள்ளார்.
50 ஆவது ஐகேஎப்ஏ கண்காட்சி உலக அரங்கில் திருப்பூரை முன்னிலைப்படுத்தும்: ஏ.சக்திவேல்
திருப்பூர், அக். 4 - பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்று மதியில் உலக அரங்கில் திருப்பூரை மும் ன்னிலைப்படுத்துவதற்கு 50ஆவது இந் திய சர்வதேச ஆயத்தஆடைக் கண் காட்சி உதவும் என்று திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க கௌரவத் தலைவர் ஏ.சக்தி வேல் கூறினார். திருப்பூர் ஐகேஎப்ஏ வளாகத்தில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்கள் 50ஆவது இந்திய சர்வதேச ஆயத்தஆடை கண் காட்சி நடைபெற உள்ளது. இந்த கண் காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு திருப்பூர் தனியார் விடுதியில் நடைபெற் றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கௌரவத் தலைவர் ஏ.சக்திவேல், ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பி ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஏ.சக்திவேல் கூறிய தாவது: உலக அரங்கில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் திருப்பூரை முன்னிலைப்ப டுத்தும் வகையில் 50ஆவது இந்திய சர் வதேச ஆயத்த ஆடை கண்காட்சி அமை யும். இதற்கான வரவேற்பு மிகச் சிறப் பாக இருக்கிறது. பல்வேறு வெளிநாடு களில் இருந்து வர்த்தகர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலைதன்மை மற்றும் செயற்கை நுண் ணறிவுத் திறனுடன் கூடியவகையில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து அதனை காட்சிப்படுத்த இக்கண்காட் சியை பயன்படுத்த உள்ளோம். இது ஏற்றுமதியாளர்களுக்கும், வர்த்தகர்க ளுக்கும் மட்டுமின்றி உற்பத்தியாளர்க ளுக்கும் மிகச்சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்றார். திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் கடந்த 5 மாதங்களில் ரூ.14ஆயிரம் கோடி அளவிற்கு நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில் அவை இன்னும் அதிக ரிக்கும். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 10 முதல் 20% வரை அதி கரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சக்திவேல் தெரிவித்தார் பின்னலாடை உற்பத்தியாளர் களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்ப டுத்தக்கூடிய நூல் விலை ஏற்றம் குறித்து தீர்வு காணக்கூடிய வகையில் உற்பத்தி யாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நூல் மில் அதிபர்கள் மற்றும் பஞ்சு வியாபாரி கள் அடங்கிய கூட்டு கமிட்டியை ஏற்ப டுத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நூல் விலை யை நிர்ணயிக்க வலியுறுத்த இருப்பதா கவும் அவர் தெரிவித்தார்.
இன்று தொழிற்சங்கங்கள் கருத்தரங்கம் இடமாற்றம்
திருப்பூர், அக். 4 – ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் பனியன் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எனவே இந்த தொழிலை மீட்டெடுக்கவும், தொழிலாளர் வாழ்வாதா ரம் பாதுகாக்கவும் திறந்தவெளிக் கருத்தரங்கத்தை அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை நடத் துகின்றன. தியாகி குமரன் சிலையில் நடைபெறும் என்று அறி விக்கப்பட்டிருந்த இந்த கருத்தரங்கம் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி ராயபுரம் ரவுண்டானா அருகே இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி அகில இந்தியத் துணைத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., திமுக எம்எல்ஏ க.செல்வராஜ், எச்எம்எஸ் மாநில செயல்தலைவர் எம்.சுப்பிரமணியபிள்ளை, ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செய லாளர் ஏ.சிவசாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் மு.சம்பத் ஆகியோர் பேசுகின்றனர். இதில் பனியன் தொழிலாளர் உள்பட அனைத்து பகுதி மக்களும் பங்கேற்குமாறு அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டமப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேருந்து மோதி பெண் குழந்தை பலி
தருமபுரி, அக்.4- ஏலகிரி அருகே அரசு பேருந்து மோதி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி - ஆர்த்தி தம்பதியினரின் 3 வயது குழந்தை பிரித்திகா. ஈச்சம்பட்டியில் இருந்து நாகா வதி அணை நோக்கி மூர்த்தி மற்றும் அவரது மனைவி, குழந்தை, உறவினர் தசரதன் ஆகியோர் இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்தனர். ஏலகிரியை அடுத்துள்ள எள்ளுகுளி பகுதியில் செல்லும் பொழுது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். பேருந்தை முந்தி சென்றவுடன் பதற்றத்தில் கையில் இருந்த குழந்தை தவறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் குழந்தை பிரித்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் மற் றும் அவரது உறவினர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்ற னர்.
குறைதீர் முகாம்
ஈரோடு, அக்.4- ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மனுதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுதாரர், எதிர்மனுதாரர்களை காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவ ஹர் முன்னிலையில் விசா ரணை நடைபெற்றது. அப் போது, அவர்களுக்கி டையே உள்ள பிரச்சனை களை சட்டப்பூர்வமான வழி களில் தீர்வு காணப்பட்டது. மேலும் அவர்களிடைய சமர சம் ஏற்படுத்தியும் மனு விசா ரணை முடிக்கப்பட்டது. அதே போல் புதிதாக வந்த மனுக் கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
அரசுப்பள்ளியில் அடிப்படை வசதியில்லை: ஆட்சியரிடம் புகார்
தருமபுரி, அக்.4- நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள் ளார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன்கொட்டாய் பகுதியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந் தசாமி தலைமை வகித்தார். இதில் சிறப்பு பார்வையாளராக தருமபுரி ஆட் சியர் கி.சாந்தி கலந்து கொண்டு, கூட்டத் தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது, அப்பகு தியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கடந்த 10 ஆண்டு களாக கழிவறை இல்லாமல் அவதிக் குள்ளாகி வருகின்றனர். இதனால் சேர்க்கை விகிதமும் குறைந்துவிட் டது. அதேசமயம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் கள், மாணவர்கள் சிறப்புடன் செயல் பட்டு வருகின்றனர். ஆனால், மாணவர் கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித் தார். இதற்கு ஆட்சியர் கி.சாந்தி, நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டால் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தலா 10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகையை ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஆட்சியரிடம் வழங் கினார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.