கோவை, பிப்.6- அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடிவுற்று துவங்கப்படும் நிலையில் உள்ளதென, வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார். கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளை யம் ஊராட்சி வையம்பாளையத்தில் அமைந்துள்ள உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் மணி மண்டபத்தில் அவருடைய 99 ஆவது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையில் நடைபெற்ற விழா வில், வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச் சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு நாராய ணசாமி நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய அமைச்சர் முத் துச்சாமி, நாராயணசாமி நாயுடு விவ சாயிகளின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருந்தார். சிறு வயதில் இருந்தே விவசாயிகளுக்காக போராடியவர். தலைவர்களுடன் இணக்கமாக பேசி விவசாயிகளுக் காக பல்வேறு திட்டங்களை பெற்றுக் கொடுத்தவர். கலைஞர் கருணாநி தியுடன் மிகவும் நெருக்கமாக இருந் தவர் என்றார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுவதும் முடிவுற்று துவங்கப்படும் நிலையில் உள்ளது. ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது. 6 மோட்டரில் 3 மோட்டர் இயக்கும் அளவில் கூட தண்ணீர் இல்லை. தமிழக முதல்வரை பொறுத்தவரை திட்டத்தை முழுமையாக கொண்டு வர வேண்டும் என்பது தான். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், விவசாயிகளின் நஷ்ட ஈடு தொகையும் வழங்கப் படும் என்றார். இந்நிகழ்வில், திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த் திக், வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், எஸ் எஸ் குளம் ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, மாவட்ட கவுன்சிலர் அபிநயா ஆறுக்குட்டி, எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி தலை வர் கோமளவல்லி கந்தசாமி, துணைத் தலைவர் மணி (எ) விஜய குமார், கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராசு (எ) பழனிசாமி, வெள் ளானப்பட்டி ஊராட்சி மன்ற தலை வர் கவிதா, துணைத் தலைவர் ராஜன் உள்ளிட்ட திரளனோர் பங்கேற்றனர்.