திருப்பூர், மே 13- தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும், பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தில்லை என திருப்பூரில் மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ் ணன் கூறினார். திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் வெள்ளி யன்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். பின்னர், திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாண வியர்களுக்கு இலவச டேப்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந் ததன் மூலம் ஏராளமான மாணவ, மாணவிகள் பயன் அடைந்தனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந் தாலும் பொதுமக்கள் மீண்டும் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கேரள மாநிலத்தில் தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழ கத்தில் இருப்பதாக கூறப்படுவ தில் உண்மை இல்லை. கேரள மாநிலத்திலும் தற்போது இல்லை என கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இத னால் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் உறுதிப்படுத்தி உள்ள னர். இது குறித்து தமிழகத்தில் அச்சப்பட வேண்டியதில்லை. கேரள மாநிலத்தில் சவர்மா உண வால் ஏற்பட்ட பிரச்சனையின் தீவி ரத்தை உணர்ந்து, தமிழகம் முழுவ தும் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத் தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை, அதுபோன்ற தடை விதிக்க வில்லை, ஆனால் பதப்படுத்தப் பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண் டும் என்றார். ஆறு ஆண்டுகளுக்கு பின்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற் கான தகுதித் தேர்வு தேதி விரை வில் அறிவிக்கப்படும். ரூபாய் 340 கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி, மருத்துவ மனை கட்டுமான பணிகள் நடை பெற்று வர கூடிய சூழ்நிலை யில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணி கள் முடிக்க பொதுப்பணித் துறை யிடம் கேட்டுக் கொண்டுள்ளதா கவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு முதலாமாண்டு மருத்துவ மாணவ, மாணவியர்களிடம் பேசிய அவர், சேவை மனப்பான் மையுடன் மாணவர்கள் கல்வி பயின்று பணியாற்ற வேண்டும், சவாலான சூழ்நிலையில் கல்லூரி யில் சேர்ந்துள்ள நீங்கள் ஆராய்ச் சியின் மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.