திருப்பூர், மார்ச் 6 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சமம் உபகுழு சார்பாக சர்வதேச மகளிர் தினம் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சனி யன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சாதனை புரிந்த 7 மகளிருக்கு விருது வழங்கப்பட்டது. வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ரமா தேவி, ராம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.ரேபா.ராம் குமார், ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவமேரி, செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி செயலாளர் முனை வர் ஏ.குழந்தை தெரேஸ், முனைவர் ரம்யாதேவி, செல்வி. வினோதாரணி, இந்திரா சுந்தரம் ஆகியோருக்கு விருது கள் வழங்கப்பட்டது. மகளிர் தின சிறப்புரையாக திருச்சி, ஆரோக்கிய உபகுழு தலைவர் சாந்தி பேசினார். இவ்விழா வினை திருப்பூர் சமம் இயக்கத்தின் தலைவர் ராணி ராம மூர்த்தி ஒருங்கிணைத்தார். மேற்கண்ட நிகழ்வில் விருது பெற்ற சாதனை மகளிர் 7 பேரின் வாழ்க்கை வரலாறு ஒரு சிறு மலராக வெளி யிடப்பட்டது. இந்த மலரினை தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் துணைத் தலைவர் மெகபுன்னிசா வெளியிட, கல்லூரி யின் முதல்வர் முனைவர். மேரி ஜோஸ்பின் பெற்றுக் கொண் டார். இந்த விழா தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சிக்கண்ணா அரசு கல்லூரி கணிப்பொறி அறிவி யல் துறை தலைவர் முனைவர். நஜீரா பேகம் தலைமை யில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் கெளரி சங்கர் நன்றி கூறினார்.