மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கட்டா குஸ்தி போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத் திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் இப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஸ்ரீரஞ்சனி கலந்து கொண்டு முதலி டம் பிடித்தார். இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய மாணவிக்கு, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.