தருமபுரி, செப்.1- சர்வதே அமைதி தினத்தை, தருமபுரி மாவட்ட இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் வியாழனன்று கடைப்பிடிக்கப் பட்டது. 1981 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை செப்டம்பர் மூன்றாவது செவ் வாய்க்கிழமையை சர்வதேச அமைதி தின மாக அறிவித்தது. இந்த நாள் பொதுச் சபை யின் ஆண்டு அமர்வுகளின் தொடக்க நாளாக இருந்தது. இந்த அனுசரிப்பு தினத்தை 2001 இல் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று உலக அமைதியை அனுஷ்டிக்கும் தினமாக மாற்றப்பட்டது.அதனடிப்படையில் உலகளாவிய ரீதியில் சர்வதேச அமைதி தினம் (அல்லது உலக அமைதி தினம்) ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று அனு சரிக்கப்படுகிறது. நல்லிணக்கத்துடன் வாழ உலகளாவிய அமைதியின் முக்கியத் துவத்தைப் பற்றி சிந்திக்க மக்களுக்கும், நாடு களுக்கும் நினைவூட்டும் நாள் உலக அமை திக்கான நாளாகும். இந்நிலையில், உலக அமைதி தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட சிஐடியு சார்பில் வெள்ளை கொடி மற்றும் மெழுகுவர்த்தியுடன் அனுசரிக்கப் பட்டது. இதில், மாநில குழு உறுப்பினர் ஜி.நாக ராஜன் தலைமை வகித்தார். மாநில செய லாளர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி. ஜீவா, மாவட்ட பொருளாளர் பி.ஜெயக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.