பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. (குறள் - 103) பயனை எதிர்பார்க்காமல் ஒருவர் செய்த உதவியின் நன் மையை ஆராய்ந்து பார்த்தால் அது கடலை விட பெரியது என்பது வள்ளுவப் பெருந்தகை யின் வாக்கு. பேரிடர் காலங்களிலும் சமூகம் சார்ந்த பிரச்ச னைகளிலும் எவ்வித பலனையும் எதிர்பாராமல் சமூகத் திற்கு உதவும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவ தற்காக 1985 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 5 ஆம் தேதியை ‘சர்வதேச தன்னார்வலர் தினமாக’ அறி வித்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி ‘சர்வதேச தன்னார்வலர் தினமாக’ உலகம் முழு வதும் கொண்டாடப்படுகிறது. மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பொது நல நோக்கோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை ஊக்குவிப் பதற்காகவும் இந்த சேவையில் ஈடுபடும் தன்னார் வலர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த நாள் சர்வதேச தன்னார்வலர்கள் தினமாக கொண்டாடப்ப டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றத்தின் போதும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொண்டு நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கானோர் தன்னார்வத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றினர். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகளிலும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் மிகுந்த சமூக அக்கறையுடன் கலந்து கொண்டனர். தனி மனிதர்கள் தன்னார்வத்தோடு பொதுநல பணிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கல்வி, சுகாதா ரம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் சமூகம் சரிவி கிதத்தில் தன்னிறைவு அடையும். எனவே, இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மக்களுக் காகவும், சமூக அவலங்களை கண்டிப்பதற்காகவும், கல்வி, அரசியல், அறிவியல் அறிவுடன் இணைந்த முதிர்ச்சி பெற்ற சமூகத்தை உருவாக்கிட தன்னார்வத்தோடு அணி திரள இந்நாளில் உறுதி ஏற்போம். - செ.முத்திவீரணன்