கோவை, டிச.16- கேரளாவில் தற்போது கொரோனா பர வல் அதிகரித்துள்ளதால், மாநில எல்லைக ளான கோவை, நீலகிரி எல்லைகளில் கண் காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 12 மணி நேரத் தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ள னர். தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிக ளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள் ளன. கேரளாவில் இருந்து கோவைக்கு தினந் தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்த மாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வரு கிறார்கள். தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி சோதனைச்சா வடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவ்வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக் கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத் துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய் வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப் பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர். அச்சப்பட தேவையில்லை கோவையில் பொதுமக்கள், பொது இடங் களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. மேலும், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றனர். இதேபோல் நீலகிரி மாவட்டத் தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்க நல்லா உள்பட அனைத்து சோதனைச்சாவடி களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. இதுகுறித்து நீலகிரி ஆட்சியர் அருணா கூறுகையில், கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்பநிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படு கின்றன. இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே, பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை, என் றார்.