தருமபுரி, ஜன.25- தருமபுரி புறநகர் பேருந்து நிலை யத்தை ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக் கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. தருமபுரி புறநகர் பேருந்து நிலை யத்திற்கு நாள்தோறும் சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்ற னர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைக் கப்பட்ட இந்த பேருந்து நிலையத்திலுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறியதால் பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் சிர மம் ஏற்பட்டது. ஆககே, புதிய சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக் கைகள் எழுந்து வந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், நக ராட்சி சார்பில் மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதன்படி ஞாயிறன்று சாலை அமைக் கும் பணி துவங்கியது.
இப்பணியை முன் னிட்டு, பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பழைய சாலைகளை பெயர்த்து அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணிகளை நக ராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நக ராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவணபாபு உள்ளிட்ட அதி காரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர். மேலும், பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் அறி வுறுத்தினர். இந்நிலையில், தருமபுரி நகர பேருந்து நிலையம், தற்காலிகமாக புறநகர் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால், நகர பேருந்து நிலையம், தருமபுரி சின்ன சாமி நாயுடு தெருவில் தற்காலிகமாக (வரும் ஜன.26 ஆம் தேதி வரை) செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நகர பேருந்துகள் வந்து செல்ல ஏது வாக, சின்னசாமி நாயுடு தெருவில் உள்ள தடுப்புகள் தற்காலிகமாக சாலையோரம் மாற்றும் பணி ஞாயிறன்று நடைபெற்றது. மேலும், இந்த தெருவில் உள்ள கடை களின் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது, சாலையோர மற்றும் தள்ளுவண்டி கடைகளை வைக்கக் கூடாது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.