districts

குவிந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

கோவை, நவ.13- கோவை மாநகராட்சியில் உள்ள 100  வார்டுகளில் தீபாவளி முடிந்ததைய டுத்து, சுமார் 1,350 டன் குப்பைகள் தேக்க மடைந்துள்ளதாகவும், அவற்றை அகற் றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100  வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500  முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப் பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி  பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக  வழக்கத்தைவிட கூடுதலாக குப்பைகள்  சேர்ந்துள்ளதாகவும், தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் சுமார் 1,350 டன் குப்பை சேர்ந்துள்ளது. இந்தக் குப்பை களை திங்களன்று காலை முதல்  தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். மேலும், தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு குப்பை களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடு பட்டு வரும் நிலையில், சிலர் விடுப்பில்  இருப்பதால் ஒரு சில இடங்களில் குப் பைகளை அகற்றும் பணிகளில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று பணியா ளர்கள் அனைவரும் பணிக்கு வந்து  விடும் பட்சத்தில் அனைத்து இடங்களி லும் உள்ள குப்பைகள் அகற்றம் பணி கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  சேலம் ஒரே நாளில் சேலம் மாநகர பகுதி யில் 150 டன் வரை பட்டாசு குப்பைகள்  தேங்கி உள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று தீபா வளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை யொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர் கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி மாநகரில் முக்கிய  பகுதிகளான அஸ்தம்பட்டி, அம்மாப் பேட்டை, கொண்டலாம்பட்டி, தாதகாப் பட்டி, அழகாபுரம், பெரமனூர், சூரமங்க லம், ஜங்சன், அரிசிபாளையம், டவுன், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, பேர்லேண்ட்ஸ் உள் பட பல பகுதிகளில் அதிக அளவில் பட் டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பட் டாசு குப்பைகள் தேங்கி உள்ளது. இதில்  சேலம் மாநகர பகுதியில் 150 டன் வரை  குப்பைகள் தேங்கி உள்ளன. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்பு ரவு ஊழியர்கள் 1000-த்திற்கும் மேற்பட் டோர் ஈடுபட்டுள்ளனர். மாலைக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்படும்  என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரி வித்தனர். அதேபோல நாமக்கல் நகராட்சியில் 5 டன் பட்டாசு குப்பைகள் குவிந்தது. இதை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 5 டன் குப்பைகள் அகற் றப்பட்டன. இந்த குப்பைகளை தனியாக  எடுத்துச் செல்லப்பட்டு தரம் பிரிக்கப் பட்டது.