ஈரோடு, பிப்.20- ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வில் வைக்கப்பட்டுள்ள தலைவர் கள் சிலைகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பில் கண்ணாடி தடுப்பு அமைக் கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் சந்திப்பு பகுதியில் பெரி யார், அம்பேத்கர், அண்ணா, கரு ணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், சமீபகாலமாக தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தி, காவிச் சாயம் பூசுதல், செருப்பு மாலை அணிப்பது போன்ற தகாத செயல் கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தலைவர்கள் சிலைகளைச் சுற்றி கண்ணாடி தடுப்புகள் அமைக் கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதுகுறித்து தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச் சாமி கூறுகையில், தலைவர்கள் சிலையை சேதப்படுத்திவிடாமல் தடுக்க ரூ.1.75 லட்சம் மதிப்பில் சிலை களுக்கு இருபுறமும் ஆள் உயர கண்ணாடி தடுப்புகள் அமைக்கப் பட்டு வருகிறது. கல் உள்ளிட்ட பொருட்களை எறிந்தாலும், எளிதில் உடையாதபடி இருக்க வலிமை யான கண்ணாடி பொருத்தப்பட உள்ளன. சிலைகளின் முன்பகுதி யில் 24 மணி நேரமும் காவல் துறை யினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.