நாமக்கல், ஜன.2- குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளுர் கோவில் திரு விழா மற்றும் பொங்கல் பண்டிகை என தொடர் பண்டிகை காலம் என்ப தால் பாக்குமட்டை தயாரிக்கும் சிறு, குறு தொழிலாளர்கள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் மற்றும் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், உள் ளூர் கோவில் திருவிழாக்கள் தற் போது நடைபெற்று வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள தால், பொங்கல் பண்டிகை சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகள் தீவிரம் காட்டி வரு கின்றனர். இந்நிலையில் பள்ளிபாளை யத்தில் பேப்பர் மில் சாலை மற்றும் பெரிய காடு, வெடியரசம்பாளை யம், உள்ளிட்ட பகுதிகளில் கணிச மான அளவில் பாக்கு மட்டை தட்டு கள் தயாரிக்கும் சிறு தொழிற்சா லைகள் இயங்கி வருகிறது. தற் போது கோவில் உள்ளூர் திருவிழா விற்கு பக்தர்களுக்கு அன்னதா னம் வழங்க மற்றும் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவு பாக்கு மட்டை தட்டுகள் தேவைப் படும் என்பதாலும், பொங்கல் பண்டிகைகக்கு தேவைப்படும் என் பதாலும், தற்போது பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கும் பணியை தொழிலாளர்கள் தீவிரப் படுத்தி உள்ளனர். இதுகுறித்து பாக்கு மட்டை தயா ரிக்கும் தொழிற்கூடத்தின் உரிமை யாளர்கள் கூறும் பொழுது, வாழை இலையின் அபரீதமான விலை ஏற்றம் மற்றும் டிமாண்ட் உள்ளிட்ட காரணங்களால், தற்போது பாக்கு மட்டை தட்டுக்கு மிகப்பெரிய அள விலான வரவேற்பு உள்ளது. வட்ட அளவிலான பாக்குமட்டை தட்டு என்பதை தாண்டி பல்வேறு, வடி வங்களில் தற்போது பாக்குமட்டை தட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது . மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்பது தற்போது அதிகளவு வலியுறுத் தப்பட்டு வரும் நிலையில்,
அதற்கு ஓரளவு கை கொடுக்கக் கூடியதாக பாக்குமட்டை தட்டு உள்ளதால், தற்போது இதனுடைய தேவை அதிகரிக்கிறது. பாக்குமட்டை தட்டு கள் தயாரிப்பதற்காக கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மொத்தமாக பாக்கு மட் டைகளை இறக்குமதி செய்து, அதை தயாரிக்கிறோம். தற்போது சீசன் காலம் என்பதால் பாக்கு மட்டை தட்டு தேவை அதிகரித்துள் ளதால், இரவும் பகலும் தொழிலா ளர்களை கொண்டு தொடர்ந்து தட்டுகளை தயாரித்து வருகி றோம் . கடந்த சில வருடங்களுக்கு முன்பு போட்டியே இல்லாத தொழி லாக இந்த தொழில் இருந்தது. தற்பொழுது மூலை முடுக்கெல் லாம் அதிகளவு இது போன்ற சிறு குறு தொழிற்சாலைகள் உருவாகி வருவதால், போட்டி காரணமாக பாக்கு மட்டை கிடைக்காத நிலை ஏற்பட்டு ,கூடுதலான விலை கொடுத்து வாங்கி அதை வாடிக்கை யாளர்களுக்கும் கூடுதல் விலை வைத்து தரவேண்டிய நிலை உள்ளது . இந்த நிலையில் தற்போது மத் திய அரசு பல்வேறு மாநிலங்க ளில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி செயல்ப டுத்தி வருகிறது. ஒரு வேலை அது தமிழகத்திலும் அமுல்படுத் தப்பட்டால் எங்களைப் போன்ற சிறு குறு தொழில் நடத்துபவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார் கள். ஏனெனில் பாக்கு மட்டை தட்டு கள் தயாரிப்பதற்கு மிக முக்கிய தேவையாக மின்சாரம் உள்ளது. ஏற்கனவே தொழில் நடத்தவே மிகுந்த சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மின்சார திருத்த சட் டங்கள் நடைமுறைக்கு வந்தால் அது இன்னும் கூடுதலான சிர மத்தை எங்களுக்கு தரும் என்றார்.