திருப்பூர், பிப்.10– திருப்பூர் மாநகராட்சியில் பிப்ர வரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தயா ரிப்பு பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளுக்கு 776 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை இரண்டாம் கட்ட கணினி முறை தேர்வு செய்யும் பணி செவ் வாயன்று நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் மின்னணு வாக்குப்ப திவு இயந்திரங்களில் வேட்பாளர் களின் பெயர் மற்றும் அவர்களு டைய சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலை யில் நடைபெற உள்ளது.
தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி
வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 3 ஆயிரத்து 732 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே முதற் கட்ட பயிற்சி வகுப்புகள் நடை பெற்று முடிந்துள்ளன. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. 210 மண்டல அலுவலர்கள், 440 பணி யாளர்கள், 48 பறக்கும் படை பணி யாளர்கள் மற்றும் 8 பொறுப்பு அலு வலர்கள் என மொத்தம் 4 ஆயி ரத்து 438 பேர் தேர்தல் பணிக்கு நிய மிக்கப்பட்டுள்ளனர்.
தபால் வாக்குகள்
வாக்குச்சாவடி அலுவலர்க ளுக்கு தபால் வாக்குகள் அவர்க ளின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய பிறகு தபால் மூலம் அல்லது சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்தில் உள்ள சீலிடப் பட்ட பெட்டியில் சேர்க்க வேண் டும்.
வாக்கு எண்ணும் மையம்
பிப்ரவரி 19 வாக்குப்பதிவு தினத்தில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற் காக சிக்கண்ணா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண் ணும் மையத்தில் பணிகள் நடை பெற்று வருகின்றன. வாக்கு எண் ணும் இடம், பாதுகாப்பு வைப்பு அறையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
ரூ.50 லட்சம் பறிமுதல்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பிறகு தகுந்த ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட் சத்து 8ஆயிரத்து 450 ரொக்கப் பணம் இதுவரை தேர்தல் பறக் கும் படையினரால் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது என்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.