districts

img

காலிங்கராயன் பாசனப் பகுதியில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தீவிரம்

ஈரோடு, ஜன.23- காலிங்கராயன் பாசன பகுதியில் இரண் டாம் போக சாகுபடிக்கான ஆயத்த பணிக ளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர். பவானிசாகர் அணையின் மூலம் காலிங் கராயன் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 15 ஆயி ரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கிறது. முதல் போக பாசனத்திற்காக கடந்த  ஜுன் மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட் டவை சாகுபடி செய்யப்பட்டன. இதில், நெல் பயிரிடப்பட்ட பகுதிகளில் அறுவடை பணி கள் நிறைவடைந்து ஒன்றரை மாதங்க ளுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும், மஞ்சள் அறுவடை பணிகளும் விரைவில் தொடங்கப் பட உள்ளது. இந்நிலையில் காலிங்கராயன் பாசன பகுதியில் இரண்டாம் போகத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து வயல்களில் தண்ணீர் நிரப்பி, நிலத்தை சமன்படுத்தும் பணிகளில் விவசா யிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் முடிந்ததும் நெல் நாற்றுவிடும் பணிகள் தொடங்கும் என்று விவசாயிகள் தெரிவித் துள்ளனர்.