உதகை, ஆக.8- உதகை ஏடிசி வாகன நிறுத்தும் இடத் தில் மார்க்கெட் வியாபாரிகளுக்காக 90 தற்காலிக கடைகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உதகை நகராட்சி மார்க்கெட்டில் 1,327 கடைகள் உள்ளன. ஆங்கிலே யர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடங்கள் என்பதால், 3 கட்டங்களாக பிரித்து பழைய கடைகளின் கட்டடங் களை உடைத்து விட்டு புதிய கட்டடங் கள் கட்ட நகராட்சி நிர்வாகம் தீர்மானித் தது. இதற்காக கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.07 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 192 கடைகளை இடிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்து ஏற்க னவே சென்னையில் இருந்து வந்து நக ராட்சி நிர்வாக அதிகாரிகள் நேரில் பார்த்து ஆய்வு செய்து சென்றனர். நக ராட்சி நிர்வாகம் சார்பில் வியாபாரிக ளுக்கு கடை வைக்க மாற்றிடம் ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கி டையே புதிய கடைகள் ஏலம் முறையில் ஒதுக்கப்படும் என்று தகவல் பரவியது. இதனிடையே ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கக்கூடாது; பழைய வியாபாரிக ளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்கெட் வியா பாரிகள் பழைய கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கடை களிலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல்வ ருக்கு மனு அனுப்புதல் உள்ளிட்ட பல் வேறு போராட்டங்களில் வியாபாரிகள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாற்றி டத்தில் கடை அமைக்க எம்.பி., நிதியிலி ருந்து நிதி ஒதுக்கீடு செய்து தற்காலிக மாக கடை அமைத்து தரவும், புதிய கடை கட்டிய பின் 192 வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட் டது. இந்த கோரிக்கையை ஏற்று வியா பாரிகள் போராட்டத்தை கைவிட்டனர். தற் போது உதகை ஏடிசி வாகன நிறுத்தும் இடத்தில், மார்க்கெட் வியாபாரிகளுக் காக தற்காலிக கடை அமைக்கும் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி ஆணையர் ஏக ராஜ், பொறியாளர் சேர்மகனி ஆகி யோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், முதற்கட்டமாக ரூ.40 லட் சம் செலவில் 90 கடைகள் அமைக்கப் படுகிறது. இப்பணிகள் அடுத்த 2 வாரத் திற்குள் முடிக்கப்பட்டு கடைகள் வியா பாரிகளுக்கு ஒப்படைக்கப்படும், என் றார்.