districts

img

மலர்களை பாதுகாக்கும் பணியில் தீவிரம்

உதகை, டிச.29- உதகையில் உறைபனி தாக்கத்தால் மலர் நாற்றுகள் கருகாமல் இருப்பதற்காக கோத்த கிரி மிலார் செடிகள் மூலம் பாதுகாப்பு நடவ டிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. அந்த வகையில் சுமார் 50 நாட்களுக்குப் பிறகு தாமதமாக கடந்த வாரம் முதல் உதகையில் உறைபனி கொட்ட தொடங் கியுள்ளது. வனப்பகுதிகள் அதிகம் கொண்ட நீலகிரி காலையில் பசுமையாக தெரியும் நிலையில் தற்போது வெண்மையாக காட்சி யளிக்கிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பனி பாதிப்பால் தேயிலை செடிகள் மலர் நாற்றுகள் கருகும் அபாயம் உள்ளது.  இதனால் விவசாயிகள் தேயிலை செடி களை வேகமாக பறிக்கும் பணியில் ஈடுபட் டுள்ளனர். இதேபோல் உதகை அரசு தாவர வியல் பூங்காவில் அடுத்தாண்டு கோடை சீச னுக்காக மலர் நாற்றுகள் நடப்பட்டு உள் ளது.  இந்த மலர் நாற்றுகள் உறைபனியால் கரு காமல் இருக்க அவற்றை கோத்தகிரி மிலார் செடிகள் மூலம் பாதுகாக்கும் பணிகள் தற் போது தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இந்தப்  பணியில் சுமார் பத்து பூங்கா ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர். இதேபோல் ரோஜா பூங்காவி லும் அலங்கார செடிகள் மீது மிலார் செடி கள் வைத்து பாதுகாக்கப்படுகிறது.