districts

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தாராபுரம், பிப். 12– தாராபுரத்தில் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் திருப் பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட னர்.  தாராபுரம் நகராட்சி 28 ஆவது வார்டில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எல்.சுகன்யா போட்டி யிடுகிறார். இவருக்கு ஆதரவாக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு  மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு  தலைமையில் கூட்டணி கட்சியினர் அப்பகு தியில் உள்ள பீமர் மெயின் வீதி, நாராயணன் பிள்ளை சந்து, சக்தி நகர், பெரியகாளியம் மன் கோவில் பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர்.   இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் என். கனகராஜ், தாராபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி  தலைவர் செந்தில்குமார், திமுக 28 ஆவது வார்டு கிளை செயலாளர் சசிக்குமார் உள் ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.