ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு நாமக்கல், ஆக.16- குமாரபாளையம் அருகே ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள எலந்தைக்குட்டை கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அப் போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுத்திகரிப்பு நிலை யம் அமைப்பதற்காக, சட்டமன்ற கூட்ட தொடரில் 110 விதி யின் கீழ் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கிடையே ஒருங்கி ணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக சாயப் பட்டறை உரிமையாளர்கள் சுமார் மூன்று கோடி ரூபாய் அர சுக்கு தங்கள் வைப்புத்தொகையை செலுத்திய பிறகு, ஒருங் கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிலங் களையும் பெற்று ஒப்படைத்தனர். கடந்த ஆறு வருடங்க ளாக கிடப்பில் இருந்த இந்த திட்டத்தை தற்பொழுது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எலந்தைக் குட்டை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு எலந்தைக்குட்டை ஊராட்சி பகுதி யில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்பொழுது அந்த தீர்மானத்தை மறைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதையடுத்து, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒருங் கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என செவ்வாயன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.