கோவை, ஜூலை 25- இன்சூரன்ஸ் ப்ரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங் கத்தின் கோவை பகுதியின் 64 ஆவது ஆண்டு மாநாடு, 37 ஆவது பொதுக்குழு கூட்டம் கோவை மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹா லில் நடைபெற்றது. தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க.சுவாமி நாதன் மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றுகையில், தற்போது 2024 தேர்தலை நோக்கிய பயணத்தில், நம்முடைய கோரிக் கைகளுக்காக போராடுகிற ஊழியர்கள், எல்ஐசியை பாதுகாக்கிற கோரிக்கைக்காக வும் போராட வேண்டி உள்ளது. தற்போது வரை எல்ஐசியின் 74 சதவிகித சந்தை பங்கு களை தக்கவைத்துள்ளது, பங்குகளை தனி யாருக்கு கொடுப்பதன் மூலம் எல்ஐசி பாலிசி தாரர்கள் நலன் சூரையாடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம். இவை நம்முடைய ஊழியர்கள் ஒற்றுமையால் ஒன்றிய அரசுக்கு உணர்த்தி யுள்ளோம். இது நமக்கு கிடைத்த வெற்றி. எல்ஐசி-யை பாதுகாப்பது ஊழியர்களின் சித் தாந்த கடமை. மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் மக்களின் மனசாட்சியை உலுக்குவதாக அமைந்துள்ளது. ஆனால், 79 நாட்கள் மௌனம் சாதித்த பிரதமரை இந்தியா இப்போது கண்டு வருகிறது. அதேபோல பிரதமரின் மௌனம் மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் உயிரி னும் மேலான பதக்கங்களை கங்கையில் வீசு வதாக அறிவிக்கவைத்தது. மணிப்பூர் மக்க ளுக்கு நேர்ந்த கொடுமை ஊடகங்களில் வெளி வந்ததற்கு ட்விட்டர நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுக்கிறது.
கலவரங்களை மூடி மறைப்பது அதன் மூலம் மக்களை விழிப் படையச் செய்யாமல் இருப்பது இவர்களு டைய சித்தாந்த நடவடிக்கையின் ஒரு பகுதி என்பதை நாம் உணர வேண்டும். தவறான நோக்கங்களோடு சித்தாந்தங்களோடு செயல் படுபவர்களை அடையாளம் கண்டு நிராக ரிக்க வேண்டும். பொதுத்துறைகளை பாது காக்கும், நடவடிக்கைகளுக்கு உடன் இருப்ப வர்களோடு இணைந்து எல்ஐசியையும், ஊழி யர்களையும் பாதுகாக்க வேண்டும், என் றார். முன்னதாக. பொதுக்குழு கூட்டத்திற்கு, கோவை மண்டலத் தலைவர் பி.வி.குமார் தலைமை ஏற்றார். கோவை மண்டல பொதுச் செயலாளர் துளசிதரன் வேலை அறிக்கை முன்வைத்தார். இணைச் செயலாளர் வி. சுரேஷ், உதவி பொருளாளர் வி.ஜானகிரா மன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இதில், பங்கு விற்பனை என்ற பெயரில் எல்ஐசி தனியார் மயப்படுத்தும் முயற்சியை கண்டித்தும், இன்சூரன்ஸ் ப்ரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். எல்ஐசி அலுவலகங்களில் முறையான பரா மரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். கருத்துரிமை மறுதலிக்கும் நடவடிக்கை களை கண்டித்தும் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநாட்டில் மண்டல தலைவராக பி.வி.குமார், பொதுச்செயலாள ராக கே.துளசிதரன், பொருளாளராக பி. சுவாமிநாதன் உட்பட 3 துணை தலைவர்கள், 3 இணைச்செயலாளர், ஒரு உதவிப்பொரு ளாளர் உட்பட 10 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் எம். கிரிஜா உரையாற்றினார்.