districts

மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒப்பந்த முறையை கைவிட அறிவுறுத்தல்

திருப்பூர், அக்.25 - மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை ஒப் பந்த முறையில் வழங்கும் நடைமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என தேசிய  தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் அறிவுறுத்தினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதனன்று தூய்மைப் பணியா ளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும்  மறுவாழ்வு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகராட்சி  மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்  பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்க ளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.  கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறுகை யில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகு திகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு முறை யான ஊதியம் வழங்குவதில்லை என குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த  முறையில் தூய்மைப் பணி வழங்கப்பட்டிருப்ப தால், ஒப்பந்ததாரர்கள் சரியான ஊதியத்தை  தர மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.  எனவே மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந் தபட்ச ஊதியத்தை கட்டாயம் வழங்க வேண் டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மற் றும் பிஎப் பிடித்தம் செய்வதை உறுதி செய்வ தோடு, அதற்கான அடையாள எண்களை அவர்களது அடையாள அட்டைகளில் தெரி யப்படுத்த வேண்டும். மேலும் திருப்பூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிலாளர் களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ, பிஎப் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. தேசிய  அளவில் தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையம் இருப்பது போல, மாநில அள வில் தூய்மைப் பணியாளர்கள் நல ஆணை யம் அமைக்க வேண்டும். பல்வேறு மாநிலங்க ளில் அவை முறையாக அமைக்கப்பட்டிருக் கின்றன. அதேபோல் தமிழகத்தில் அமைத் திட வேண்டும். தமிழகத்தில் மாநகராட்சி, நக ராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியை ஒப்பந்த  முறையில் வழங்குவதை நிறுத்திவிட்டு மாந கராட்சி,  நகராட்சி மற்றும் பேரூராட்சிகள்  நேரடியாகவே தூய்மைப் பணியாளர்க ளுக்கு ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய  வேண்டும். அதன் மூலமாகவே அவர்கள் வாழ்வாதாரம் உயரும் என்று கூறினார்.