districts

உணவில் புழு: அதிகாரிகள் ஆய்வு

சேலம், ஜன.7- சேலம் அத்வைத ஆசிரமம் சாலையில் உள்ள உணவகத்தின் சாம்பார் சாதத்தில் புழுக்கள் கிடந்ததால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவ கத்தை மூடினர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் தனி யார் உணவகம் இயங்கி வருகிறது. இந்த  உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சாம் பார் சாதம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டி ருந்தார். அப்போது சாதத்தில் புழுக்கள் கிடந்தன. உடனே உணவக உரிமையாளரி டம் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு உரி மையாளர் முறையாக பதில் சொல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இத னால் அந்த வாடிக்கையாளர், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை தொடர்புகொண்டு புகாரளித்தார். அதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் உத்தரவில், உணவு பாது காப்பு ஆய்வாளர் சுருளிராஜன் தலைமை யிலான குழுவினர் அந்த உணவகத்திற்கு சென்று உணவுகளை ஆய்வு செய்தனர். அதில் சாம்பார் சாதத்தில், புழுக்கள் இருப் பது உறுதியானது. இதையடுத்து உணவ கத்திலிருந்த உணவுகளை அப்புறப்படுத்தி னர். தொடர்ந்து பூச்சிகள் வராதவகையில் தடுப்பு நடவடிக்கை எடுத்துவிட்டு, எங்க ளுக்கு தகவலளித்து நாங்கள் வந்து ஆய்வு செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண் டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் உத்தரவிட்டனர்.