districts

img

தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு

பொள்ளாச்சி, ஜூன் 6- பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாக னங்கள் சிறப்பு ஆய்வு முகாம் நடை பெற்றது. பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு படிக் கும் மாணவர்களை அழைத்து செல்ல  வேன், பேருந்து போன்ற வாகனங்கள் பயன் படுத்தப்படுகின்றது. இந்த வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா? அரசின் விதிமுறை கள் கடைபிடிக்கப்படுகின்றனவா? ஆவணங் கள் முறையாக உள்ளனவா? என்பது குறித்து ஆண்டுக்கு ஒருமுறை வட்டார போக்கு வரத்து துறை அதிகாரி மூலமாக ஆய்வு செய்யப்படும். அதன்படி திங்களன்று பொள் ளாச்சி நகரம் மற்றும் ஆனைமலை, நெகமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் செயல் படும் தனியார் பள்ளி வாகனங்கள் தரக் கட்டுப்பாடு குறித்து  ஆய்வு செய்யப்பட்டது. பாலக்காடு சாலையிலுள்ள உள்ள நக ராட்சி பள்ளி மைதானத்தில் சுமார் 280 வாக னங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை யில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், பொள்ளாச்சி சரக காவல்  துணை கண்காணிப்பாளர் (பொ) செல்வ ராஜ், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மோட் டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ் ணன், ரவிக்குமார், குமரன் உள்ளிட்டோர் வாகனங்களை ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி மைதானத்தில் கண் பரிசோதனை முகாமிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள் அனைவருக் கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.