districts

img

தாராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், பிப்.22- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பல் வேறு பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்  கீழ் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வியாழனன்று ஆய்வு  மேற்கொண்டார். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தாராபுரம் நகராட்சி  பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப்பணி கள் குறித்தும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுவது குறித் தும் ஆய்வு மேற்கொண்டு தூய்மைப் பணியாளர்களிடம் கலந் துரையாடினார். ஊழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். நஞ்சியம்பாளை யம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நஞ்சியம்பாளையம் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் குறித்தும்  ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப. ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், பொதுமேலாளர் (ஆவின்) சுஜாதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.