கோவை, மார்ச் 6- வடமாநில தொழிலாளர்கள் தொடர் பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியைத் தொடர்ந்து கோவை மாவட் டத்தில் பீகார் மாநிலக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலா ளர்கள் தாக்கப்படுவது போன்ற சித்தரிக் கப்பட்ட காணொளி சமூக வலைதளங்க ளில் பரவியது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தங் கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்ப தாகவும் ஒரு தகவல் பரவியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியது. இது பீகார் மாநி லத்திலும் எதிரொலிக்கவே, அந்த மாநில அரசு உண்மை நிலையை கண்டறிவ தற்காக ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் நுண்ண றிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலோக்குமார், காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது. அந்த குழு சனியன்று சென்னையில் தமிழ்நாடு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், காவல் துறை இயக்கு நர் சைலேந்திரபாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அந்த குழுவினர் ஞாயிறன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், ஆட்சியர் எஸ்.வினீத் தலை மையில் நடந்த ஆலோசனை கூட்டத் தில் பங்கேற்றனர். இதனையடுத்து, திங்களன்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற் கொண்டனர். பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர், கோவை மாவட்டத்தில் அன்னூர், மேட்டுப்பா ளையம் பகுதிகளில் வட மாநிலத்தவர் கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனி யார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண் டனர். அப்போது அங்கு பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினர். பின்னர் ஆட்சி யர் அலுவலகத்தில் ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணை யர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தொழில் அமைப்பினர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பீகார் மாநில குழு வினரிடம், கோவை மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து விளக் கப்பட்டது. மேலும், வடமாநில தொழி லாளர்களுக்கு கடந்த சில நாட்களாக பல் வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப் பட்டு வந்ததும் குறித்து மாவட்ட நிர்வாகத் தினர் விரிவாக விளக்கி கூறினர்.