நாமக்கல், அக்.2- பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் தந்தை பெரியார் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் சமூக நீதிக் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தந்தை பெரியார் சிலை இல்லாத நிலை உள்ளது. எனவே, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவருடைய சித்தனைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலும், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரியார் சிலை அமைப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதுகுறித்து பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோரை சந்தித்து மனு வழங்குவதெனவும் முடிவு எடுக்கப்பட்டது.