தருமபுரி, டிச.29- காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட படைப்பாளர், பதிப்பாளர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டப் படைப்பாளர், பதிப்பாளர் சங்க கூட் டம் தருமபுரி முத்து இல்லத்தில், சங்கத் தலைவர் சி.சரவ ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், செயலாளர் மா.பழனி, பொருளாளர் த.அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், புத்தகங்கள் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவி கிதத்தை நீக்க வேண்டும். பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் படைப்பாளர், பதிப்பாளர் நல வாரியத்தை மீண் டும் தொடங்க வேண்டும். மாவட்ட படைப்பாளர்களின் நூல் கள் மைய நூலகத்தில் காட்சிப்படுத்த தனிப்பிரிவு ஏற்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.