தருமபுரி, பிப்.8- நல்லம்பள்ளி அருகே சேதமடைந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்றிய மைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளி வட்டம், டொக்க போதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது குறிஞ்சி நகர். இப் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து எப் போது வேண்டுமானலும் கீழே விழலாம் என்ற அபாய நிலை யில் இருந்து வருகிறது. ஆகவே, சேதமடைந்த மின்கம் பத்தை மாற்றியமைக்க வேண்டும் என பலமுறை மனு அளித் தும், மின்வாரியத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்து கின்றனர்.